Friday, 29 January 2021
What is the magnificence of Thaipusam festival?
Wednesday, 27 January 2021
Artificial Rose Bokeh!
Tuesday, 26 January 2021
Online business ideas
History of Marconi, the father of radio
History of ABJ Abdul Kalam
Monday, 25 January 2021
வீட்டில் பூச்செடி வளர்ப்பு முறை
செண்டுமல்லி சாகுபடி முறை
கோவை அய்யாமுத்து வரலாறு
பிறப்பு : கி.பி.1898
இறப்பு : 20-12-1975
பெற்றோர் : அங்கண்ணன், மாரம்மாள்
இடம் : காங்கயம், கோவை மாவட்டம், தமிழ்நாடு
புத்தகங்கள் : நச்சுப்பொய்கை, இராஜபக்தி, மேவாரின் வீழ்ச்சி, பிச்சைக்காரி
வகித்த பதவி : இந்திய விடுதலைப் போராட்ட வீரர்
வரலாறு:-வாழ்க்கை வரலாறு
கோவை அய்யாமுத்து ஒரு தமிழ் எழுத்தாளர், காந்தியவாதி மற்றும் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்; சர்வோதயா இயக்கத்தின் தலைவர்களில் ஒருவர். காந்தியுடன் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தார். ஈ. வே. ராமசாமியின் நண்பராக இருந்தார். இவரது ‘எனது நினைவுகள்’ என்ற தன்வரலாற்று நூல் தமிழக அரசியல் வரலாற்று ஆவணமாக விளங்குகிறது.
அய்யாமுத்து கோவை மாவட்டம் காங்கயத்தை அடுத்த பரஞ்சேர்வழி கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். இவரது தந்தை அங்கண்ணன்; தாய் மாரம்மாள். இவர் கொங்கு வேளாளர் சமூகத்தில் பயிரன் கூட்டத்தை சேர்ந்தவர்.
அய்யாமுத்துவின் மூத்த சகோதரர் நஞ்சப்பன். 1903ம் ஆண்டில் ஐந்து வயதுப்பையனாக இருந்தபோது கோயமுத்தூர் ஆதம்சா மக்கான் கொட்டகையில் நடைபெற்ற நல்லதங்காள் நாடகத்தில் வேடமிட்டார். அது அய்யாமுத்துவை கலையிலக்கிய தளம் நோக்கி ஈர்த்தது. மாணவராக இருக்கையில் வ. உ. சியையும் சுப்ரமணிய சிவாவையும் போலீஸார் விலங்கிட்டு தெருத்தெருவாக இழுத்துச்சென்றதை கண்டு சுதந்திர ஆர்வம் கொண்டார்.
1918ல் முதல் உலகப்போரின்போது ஐரோப்பியப் படையில் சேர்ந்தார். பஸ்ரா, மெஸபடோமியா போன்ற நாடுகளில் பணியாற்றியிருக்கிறார். 1921ல் கிணத்துக்கடவைச் சேர்ந்த கோவிந்தம்மாளை மணம் செய்து கொண்டார். 1921ல் கோவைக்கு வருகை தந்த காந்தியின் உரை கேட்டு தம்பதியர் காங்கிரஸில் இணைந்தார்கள். இருவரும் இணைந்து சுதந்திரப் போராட்டத்தில் பணியாற்றினர்.
இருவரும் 1923ல் கோவையில் குடியேறினார்கள். காந்தியின் ஆணைப்படி கதரியக்கத்தை கோவையில் ஆரம்பித்தார். கோவையில் அகில பாரத சர்க்கா சங்கத்தின் கதர் உற்பத்திசாலையை நிறுவினார். 1931ல் போலீஸ் குடியிருப்பில் தண்ணீர் எடுக்க ஒரு தலித் போலீஸ் காவலரை மற்ற ஜாதிகளை சேர்ந்த போலீசார் அனுமதிக்கவில்லை. இதைக் கேள்விப்பட்ட அய்யாமுத்து தன் மனைவியுடன் அங்கு சென்று அந்தத் கிணற்றுக்கு அவரை அழைத்துச் சென்று தண்ணீர் இறைக்கச்செய்தார். அதிலிருந்து ஹரிஜன இயக்கத்தில் ஆர்வம் கொண்டு பணியாற்றினார்.
அக்காலத்தில் ஈ. வே. ராமசாமியுடன் நட்பு கொண்டார். 1924ல் வைக்கம் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைசென்றார். பின்னர் சுசீந்திரம் ஆலயப்பிரவேசப் போராட்டத்திலும் தீவிரப் பங்கேற்றார். 1926ல் பாரத சர்க்கா சங்கத்தின் தமிழ்நாட்டு செயலாளர் எஸ். இராமநாதன் வேண்டுகோளை ஏற்று எர்ணாகுளம் வஸ்திராலயத்தை வழிநடத்தினார்.
1933ல் திருப்பூர் கதர் வஸ்திராலயத் தலைவரானார். 1936ல் தமிழ்நாடு சர்க்கா சங்கத் தலைவரானார். 1940 வரை கதர் இயக்கத்தின் தீவிர வெற்றிக்குக் காரணமாக இருந்தனர். கதர் அய்யாமுத்து என்று அவரை அக்காலகட்டத்தில் அழைத்தார்கள். 1932ல் காந்தி சிறைப்பிடிக்கப்பட்டதை எதிர்த்துப் போராடியதால் ஆறுமாதக் கடுங்காவல் தண்டனை பெற்றார் அய்யாமுத்துவின் மனைவி. கிட்டத்தட்ட ஆறாண்டுகள் இந்திய சுதந்திரப் போராட்டத்திற்காக சிறையில் இருந்திருக்கிறார் அய்யாமுத்து.
சுதந்திரத்திற்குப் பின்னர் கதரியக்கத்திலும் கிராம நிர்மாணத்திலும் பணியாற்றினார். ராஜாஜியின் அரசியல் வழியை பின் தொடர்ந்தார். 1950ல் நாசிக் காங்கிரஸ் மாநாட்டுக்குப் பின் தீவிர அரசியலை விட்டு ஒதுங்கினார். 1960லிருந்து 1967 வரை சுதந்திரக் கட்சியில் பணியாற்றினார். கதர் இயக்கத்துக்காகக் குடிநூல் என்னும் இதழை நடத்தி வந்தார்.
1951ல் பொள்ளாச்சி அருகே கோதைவாடி என்னும் ஊரில் 23 ஏக்கர் நிலம் வாங்கி காந்தி பண்ணை என்று பெயரிட்டு வேளாண்மை செய்து வந்தார். தம் இல்லத்துக்கு ராஜாஜி இல்லம் என்று பெயர் சூட்டினார்.
மூன்று முறை இதயநோயால் தாக்கப்பட்டு நலிவுற்ற அய்யாமுத்து 21-12-1975ல் காலமானார். இவர் காலமான அடுத்த வாரமே 27-12-1975ல் இவருடைய துணைவியார் கோவிந்தம்மாளும் காலமானார்
ஜவஹர்லால் நேரு வரலாறு
பிறப்பு : 14.11.1889
இறப்பு : 27.05.1964
பெற்றோர் : மோதிலால் நேரு, சுவரூப ராணி அம்மையார்
இடம் : உத்தரப் பிரதேசம்
புத்தகங்கள் : விடுதலையை நோக்கி (Toward Freedom), கண்டுணர்ந்த இந்தியா (Discovery of India), உலக வரலாற்றுத் துளிகள் (Glimpses of World History)
வகித்த பதவி : இந்தியாவின் முதல் பிரதமர்
விருதுகள் : பாரத ரத்னா
வரலாறு:-ஜவஹர்லால் நேரு
👉ஜவஹர்லால் நேரு அவர்கள் 1889ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அலகாபாத்தில் பிறந்தார். இவருடைய தந்தை செல்வந்தரும், வழக்கறிஞருமான மோதிலால் நேரு ஆவார். இவருடைய தாயார் சுவரூப ராணி அம்மையார் ஆவார். இத்தம்பதியினருக்கு நேரு மூன்றாவது குழந்தையாக பிறந்தார்.
👉ஆரம்பக் காலத்தில் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஜவஹர்லால் நேருவின் தந்தை மோதிலால் நேரு வழக்கறிஞர் ஆதலால் அப்போது இருந்த ராஜாக்கள், ஜமீன்தார்கள், பெரும் பணக்காரர்களின் வழக்குகளுக்கு இவர் வாதாடியதால் பின்னாளில் பெரும் செல்வந்தராக வளர்ந்து நின்றார். எனவே, மோதிலால் தனது இருப்பிடத்தைப் பணக்காரர்கள் வசிக்கும் பகுதிக்கு மாற்றிக்கொண்டார்.
👉ஜவஹர்லால் நேரு பிறக்கும்போது மாளிகை போன்ற வீட்டில் செல்வ செழிப்புகளுடன், பெரிய அந்தஸ்துடன் இருந்துள்ளது. ஜவஹர்லால் நேருவுடன் பிறந்தவர்கள் இரண்டு சகோதரிகள்,
👉ஒருவர் விஜயலட்சுமி பண்டிட்
👉மற்றொருவர் கிருஷ்ணா நேரு ஹூதீசிங் ஆவார்.
👉இவர்கள் மூவரும் சிறுவயதிலிருந்தே ஆங்கில நாகரிகத்துடன் வளர்க்கப்பட்டவர்கள்.
பெயர் அர்த்தம் :
👉உருதுவில் ஜவஹர்_இ லால் என்றால் 'சிகப்பு நகை' என்று பொருள், இச்சொல்லிலிருந்து 'ஜவஹர்லால்' என்ற பெயர் உருவானது.
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி :
👉ஜவஹர்லால் நேருவிற்கு இந்தி மொழி, சமஸ்கிருதம் மற்றும் இந்தியக் கலைகள் கற்றுக்கொடுக்கப்பட்டன.
👉மோதிலால் நேரு, இந்தியக் குடிமக்கள் சேவைக்குத் தன் மகன் தகுதி பெற வேண்டும் என்று விரும்பினார். அதற்காக ஜவஹர்லால் நேருவை இங்கிலாந்தில் உள்ள ஹார்ரோவிற்கு அனுப்பினார்.
👉அங்கு அவருக்கு பள்ளிப் பாடத்திட்டம் கடுமையாக இருப்பதாகவும், தங்குமிடம் வீட்டிலிருந்து வெகுதொலைவு இருப்பதாகவும் உணர்ந்தார். இருப்பினும் ஜவஹர்லால் நேரு பள்ளிப்படிப்பை முடித்ததும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகளை 1907ல் எழுதி, டிரினிட்டி கல்லூரிக்கு சென்று இயற்கை அறிவியல் படித்தார்.
👉ஹார்ரோ கல்லூரி, கேம்ப்ரிட்ஜ் ஆகியவற்றில் படிக்கும்போது அவரின் கலகலப்பான குணத்திற்காக நேருவை 'ஜோ' நேரு என்று அழைப்பார்கள் ஐரோப்பிய நண்பர்கள்.
👉நேரு டிரினிட்டி கல்லூரியில் இயற்கை அறிவியல் மாணவராக இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகியவற்றை படிக்க வேண்டியிருந்தது. கணிதம் அவருக்கு உகந்த பாடமில்லை என்பதால் டிரினிட்டி கல்லூரியில் தாவரவியலை தன்னுடைய விருப்பப்பாடமாக தேர்வு செய்து படித்தார்.
👉1910ஆம் ஆண்டு இயற்கை அறிவியலில் ஹானர்ஸ் பட்டம் பெற்றார். கேம்ப்ரிட்ஜ் மற்றும் டிரினிட்டி கல்லூரியில் படிப்பை முடித்த அவர், இன்னர் டெம்பிலில் சட்டம் பயில பதிவு செய்துக்கொண்டார். அதன்பின் சட்டப்படிப்பை வெற்றிகரமாக முடித்த நேரு தனது சட்டப் பணியை தொடங்க 1912ல் இந்தியா திரும்பினார்.
நேருவின் திருமண வாழ்க்கை :
👉நேரு அவர்கள், 1916ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி கமலா கவுல் என்ற பிராமணப் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு, கமலா நேருவும் சுதந்திர இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
👉திருமணமான அடுத்த ஆண்டில் இந்திரா பிரியதர்ஷனி என்ற மகள் பிறந்தாள். (பின்னாளில் ஃபெரோஸ் காந்தியை திருமணம் செய்து கொண்ட அவர், 'இந்திரா காந்தி' என என்றழைக்கப்பட்டார்).
👉இருபது ஆண்டுகாலம் நேருவுடன் வாழ்ந்த கமலா நேரு, 1936ல் புற்றுநோயால் இறந்தார். கமலா நேருவின் இறப்பிற்கு பிறகு, கடைசிவரை தனியாகவே வாழ்ந்தார் நேரு.
அரசியல் வாழ்க்கை :
👉மாணவராக இருந்த காலத்திலிருந்தே அயல்நாட்டின் பிடியில் இருந்து பாதிக்கப்பட்டு விடுதலைக்காக போராடுகின்ற தேசங்களின் மீது அவர் ஆர்வம் காட்டி வந்தார். பின் இந்தியாவின் விடுதலை போராட்டத்தில் அவர் ஈர்க்கப்பட்டு அதில் இணைந்து போராடினார்.
👉வழக்கறிஞர் தேர்வில் வெற்றி பெற்று பணியாற்றிக்கொண்டு இருக்கின்றபோதே நேருவிற்கு இந்திய அரசியலின் மீது ஆர்வம் ஏற்பட்டது.
👉அதன்பின் காங்கிரஸ் இயக்கத்தில் காந்தியின் தலைமையின் கீழ் செயல்பட்டார். 1913ஆம் ஆண்டு காந்தியடிகளின் பொது உரிமை போராட்டத்திற்கு (Civil rights Campaign) நிதி வசூலித்துக் கொடுத்தார்.
சுதந்திர போராட்டத்தில் ஜவஹர்லால் நேரு :
👉ஜவஹர்லால் நேரு 1916ல் மகாத்மா காந்தியை முதன்முதலில் சந்தித்தார். முதல் சந்திப்பின்போதே அவர் மகாத்மா காந்தியால் வெகுவாக ஈர்க்கப்பட்டார். இது காந்தி-நேரு இருவருக்குமான இணைப்பிரியா தோழமையின் தொடக்கமாக அமைந்தது.
👉1917ஆம் ஆண்டு அன்னி பெசன்ட் அம்மையார் துவங்கிய தன்னாட்சி இயக்கத்தின் செயலாளர் ஆனார்.
👉'தி இன்டிபென்டன்ட்' இதழை தன்னுடைய தந்தை மோதிலால் நேருவுடன் இணைந்து 1919ல் ஆரம்பித்தார்.
👉நேஷனல் ஹெரால்டு என்ற பத்திரிக்கையை 1938ஆம் ஆண்டு நேரு துவங்கி நடத்தினார்.
👉1919ல் நடந்த 'ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவம்' நேருவை சுதந்திர போராட்டத்தில் ஈடுபட வழிவகுத்தது எனலாம். இந்தியாவின் அம்ரித்சர் நகரில் ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில் ஆயுதம் ஏதுமின்றி கூட்டத்தில் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பாராமல் ஆங்கில அரசு ரெஜினால்ட் டையர் என்ற ராணுவ அதிகாரியின் தலைமையில் அப்பாவி மக்களைக் கொன்று குவித்தது.
👉அப்பாவி மக்களின் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் வெள்ளையர் ஆட்சியின் மீது நேருவுக்கு வெறுப்புணர்வை அதிகரித்தது மட்டுமல்லாமல் காங்கிரஸ் கட்சியில் அவரை ஈடுபடுத்திக் கொள்ளவும் காரணமாக அமைந்தது.
👉காந்தியின் கொள்கைகளின் மீது அதிக ஈடுபாடுகொண்ட நேருவும், அவருடைய குடும்பமும் விலையுயர்ந்த மேற்கு ஆடைகள் உடுத்துவதை தவிர்த்து கதர் ஆடையை உடுத்தினர்.
👉தந்தையை விடுதலைப் போரில் ஈடுபடுத்திய பெருமை நேருவை சேரும். 'மோதிலால் நேரு இந்திய விடுதலைப் போரில் ஈடுபடக்காரணம் அவர் மகன் மீதான அன்பே. நேருவின் மீதான அன்பே தேசப் போராட்டத்தில் அவரை ஈடுபடுத்தியிருக்கிறது' என்றார் காந்தியடிகள்.
👉காந்தியின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவராக மாறிய நேரு, 1920ல் காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கெடுத்ததற்காக 1921ல் முதன் முதலாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சில மாதங்கள் கழித்து விடுதலை செய்யப்பட்ட அவர், 1924-ல் அலகாபாத் நகராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
👉இரண்டு ஆண்டுகள் தலைமை நிர்வாகியாக சிறப்பாக பணியாற்றிய அவர், 1926ல் தனது பணியை ராஜினாமா செய்தார். பின்னர் 1926 முதல் 1928 வரை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளராக பணியாற்றினார்.
👉நேருவின் தந்தையார் மற்றும் சி.ஆர்.தாஸ் தொடங்கிய 'சுயராஜ்ய கட்சி'-யில் நேரு சேராமல், காந்தியுடனே பணியாற்றினார். நேரு, சுபாஷ் சந்திரபோஸ் அவர்களுடன் இணைந்து பிற விடுதலை பெற்ற நாடுகளுடன் நல்லுறவை பேண விரும்பினார்.
சுதந்திர போராட்டத்தில் நேருவின் பங்கு :
👉இந்திய சுதந்திர போராட்டத்தின் சர்வதேச கண்ணோட்டத்தின் வளர்ச்சியில் நேரு முக்கிய பங்கு வகித்தார்.
👉நேரு இந்தியாவிற்காக வெளிநாட்டு நட்பு நாடுகளை நாடினார். மேலும் உலகம் முழுவதும் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்திற்கான இயக்கங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தினார்.
👉1926ல் இத்தாலி, சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து, பெல்ஜியம், ஜெர்மனி, ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார்.
👉1927ஆம் ஆண்டில், அவரது முயற்சிகள் பலனளித்தன. இந்திய தேசிய காங்கிரஸின் பிரதிநிதியாக பெல்ஜியம் புரூசல் பகுதியில் நடைபெற்ற ஒடுக்கப்பட்ட நாடுகளின் கூட்டத்தில் அவர் பங்கேற்றார்.
👉பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திலிருந்து சுதந்திரத்திற்கான போராட்டத்தை பெருநகரத்தின் பல்வேறு பகுதிகளில் பல தேசிய முயற்சியாக நேரு கண்டார்.
நேரு - சுபாஷ் சந்திர போஸ் :
👉உலகெங்கிலும் உள்ள சுதந்திர நாடுகளின் அரசாங்கங்களுடன் நல்ல உறவை வளர்ப்பதில் நேரு, சுபாஸ் சந்திர போஸுடன் சேர்ந்து நெருக்கமாக பணியாற்றினார்.
👉இருப்பினும், 1930களின் பிற்பகுதியில் இருவரும் பிரிந்தனர். பிரிட்டிஷாரை இந்தியாவிலிருந்து வெளியேற்றுவதில் பாசிஸ்டுகளின் உதவியை நாட சுபாஷ் சந்திர போஸ் ஒப்புக்கொண்டார்.
👉அதே நேரத்தில், ஸ்பெயினின் உள்நாட்டுப் போரில் பிரான்சிஸ்கோ பிராங்கோவின் படைகளுக்கு எதிராக போராடும் குடியரசுக் கட்சியினரை நேரு ஆதரித்தார்.
👉1928ல் சைமன் கமிஷனுக்கு எதிராக நடைபெற்ற ஊர்வலத்திற்கு தலைமை தாங்கியதால் காவலர்கள் நேருவின் மீது தடியடி நடத்தினர். 1928ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் தேதி அவர் அனைத்து கட்சி மாநாட்டில் கலந்துக்கொண்டார்.
👉நேரு முதன்முதலில் இந்திய தேசிய காங்கிரஸை காந்தியின் வழிகாட்டுதலில், 1929ஆம் ஆண்டு லாகூர் நிகழ்ச்சியை தலைமையேற்று நடத்தினார். நேரு தலைமையில் நடைபெற்ற லாகூர் காங்கிரஸ் மாநாட்டில் முழுச் சுதந்திர தீர்மானம் (Poorna swaraj resolution) நிறைவேற்றப்பட்ட பிறகு காங்கிரஸில் நேருவின் முக்கியத்துவம் கூடியது.
👉பின்னர், ஜனவரி 26, 1930ல் சுதந்திரம் கோரி இந்திய சுதந்திரக் கொடி நேருவால் லாகூரில் பறக்கவிடப்பட்டது. அதே ஆண்டில், இந்தியா உடனான ஆங்கிலேயரின் இணைப்பை துண்டித்து 'சுதந்திர இந்தியா' என்ற அமைப்பை அவர் நிறுவினார். பின்பு அதன் பொதுச்செயலராகவும் பொறுப்பேற்றார்.
👉சத்தியாகிரகம் மற்றும் காங்கிரஸால் ஆரம்பிக்கப்பட்ட பல்வேறு இயக்கங்களில் பங்கேற்றதற்காக 1930 முதல் 1935ஆம் ஆண்டுகளில் அவர் பலமுறை சிறையில் அடைக்கப்பட்டார். 1935ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி அல்மோரா சிறையில் அவர் தனது சுயசரிதையை எழுதி முடித்தார்.
👉1938ல் தேசிய திட்டக்கமிட்டியின் தலைவராக நேரு தேர்வு செய்யப்பட்டார். தேச உருவாக்கம் எப்படி அமைய வேண்டும்? என்பதை திட்டமிடும் பொறுப்பு இந்த கமிட்டிக்கு வழங்கப்பட்டிருந்தது.
👉பண்டிட் நேரு 1940ல் இந்தியாவை வலுக்கட்டாயமாக உலக போரில் பங்கேற்க வைப்பதை கண்டித்து தனிநபராக சத்தியாகிரகம் மேற்கொண்டபோது கைது செய்யப்பட்டார். அதன்பின் டிசம்பரில் மற்ற தலைவர்களுடன் இவரும் விடுதலை செய்யப்பட்டார்.
👉1942ல் வரலாறு சிறப்புமிக்க 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்திற்கான தீர்மானத்தை மும்பையில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் குழுவில் முன்மொழிந்தார்.
👉இதனால் மற்ற தலைவர்களுடன் நேருவும் கைது செய்யப்பட்டு அகமத் நகர் கோட்டைக்கு அழைத்து செல்லப்பட்டார். இதுவே இவருடைய இறுதியான மற்றும் நீண்டகால சிறைவாசமாகும். இதேபோன்று இவர் 9 முறை கைது செய்யப்பட்டார்.
👉விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக 3,269 நாட்களை நேரு சிறையில் கழித்தார். அங்கே பல அற்புதமான நூல்களை எழுதினார்.
👉ஆங்கிலேயர் ஆட்சி செய்யாத மாகாணங்களை சேர்ந்தவர்களையும் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக்கும் திட்டத்தை நேருவே செயல்படுத்தினார்.
👉நேருவிற்கு பேரன் பிறந்தபோது மன்னிப்பு கேட்டால் சிறையை விட்டு அனுப்புகிறோம் என்று ஆங்கிலேயர் கூறவே அதை மறுத்துவிட்டார் நேரு.
👉தெருவில் போலீஸ் வாகனம் போகும்போது விளக்கு வெளிச்சத்தில் பேரனை தூக்கி இந்திரா காண்பிக்க, பேரனை பார்த்துவிட்டு, 'இவர்கள் வெளிச்சத்தில் வாழவேண்டும் என்றுதான் நாங்கள் இருளில் உழல்கிறோம்!' என்று கடிதம் எழுதினார்.
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் :
👉1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து தனி சுதந்திர நாடாக இந்தியா விடுதலை பெற்றது. புதுடெல்லியில் சுதந்திர இந்தியாவின் கொடியை ஏற்றும் தனிப்பெருமை நேருவிற்கு வழங்கப்பட்டது. அன்று முதல், சுதந்திர இந்தியாவின் வளர்ச்சிக்கு தன்னை முழுவதுமாக அற்பணித்துக்கொண்டார்.
👉இந்தியாவில் முதல் தேர்தல் 1951ஆம் ஆண்டு டிசம்பரில் தொடங்கி 1952ஆம் ஆண்டு மே வரை நடைபெற்றது. முதல் இந்திய தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பெற்று ஜவஹர்லால் நேரு, தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய பிரதமர் என்ற சிறப்பை பெற்றார். மிக அதிக காலம் இந்தியாவின் பிரதமராக இருந்தவர் என்கிற சாதனைக்குரியவர் நேரு.
மொழிவாரி மாநிலம் :
👉1948ஆம் ஆண்டில் ஜவஹர்லால் நேரு, வல்லபாய் படேல், பட்டாபி சீதாராமையா ஆகிய மூவரையும் உறுப்பினராக கொண்டு காங்கிரஸ் கட்சி அமைத்த 'ஜேவிபி' குழுவின் மொழிவாரி மாகாண உருவாக்கத்தை இவர் ஆதரிக்கவில்லை.
👉பிரிவினையை மதரீதியாக நிகழ்த்தி தேசம் தூண்டப்பட்டதால் மொழிவாரி மாநிலங்களுக்கு நேரு அனுமதி தர மறுத்தார்.
👉சென்னை மாகாணத்திலிருந்து தெலுங்கு பேசும் மக்களுக்கான தனி மாகாணமான ஆந்திரா உருவாக்கப்பட வேண்டுமென்று வலியுறுத்தி, உண்ணாவிரதமிருந்து பொட்டி ஸ்ரீராமுலு 1952ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உயிர் நீத்தார்.
👉பொட்டி ஸ்ரீராமுலுவின் மறைவுக்கு மூன்று தினங்களுக்குப் பின் ஆந்திர மாநிலம் அமைக்கப்படுமென்று இந்தியப் பிரதமர் நேரு அறிவித்தார்.
👉இந்தியை தேசிய மொழியாக்க முயற்சிகள் நிகழ்ந்த பொழுது இந்தி பேசாத மாநிலங்களின் அச்சத்தைக் கருத்தில் கொண்டு 'நீங்கள் விரும்பும் வரை ஆங்கிலத்தையே பயன்படுத்தலாம்' என்று உறுதிமொழி தந்தார் நேரு.
👉அவரது ஆட்சியில், இந்தியாவின் வளர்ச்சிக்கு பல திட்டங்களை தீட்டி, நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்றார் என்றால் அது மிகையாகாது.
👉1955ஆம் ஆண்டில், நேருவுக்கு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
நேருவால் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் :
👉ஐந்தாண்டு திட்டங்கள்
👉வெளியுறவு கொள்கையில் பஞ்சசீலக் கொள்கை
👉அணிசேராக் கொள்கை
👉அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு இடப்பட்ட அடித்தளம்
👉பாகிஸ்தான், சீனப் போர் நெருக்கடிகள்
👉மாநிலங்களின் ஒற்றுமை மற்றும் நலன் கருதி கொண்டுவரப்பட்ட மாநில மறுசீரமைப்பு மற்றும் அலுவல் மொழி ஆணையம்
👉அரசாங்கத்தின் தொழிற்சாலைகளின் முதலீடு மற்றும் விவசாயத்தை வரையறுத்தது
👉தொழிற்சாலைகளை அதிகப்படுத்துதல்
👉வருமான வரிகள் மூலம் கலப்பு பொருளாதாரத்தை உருவாக்குதல்
👉சுரங்கம், மின்சாரம் மற்றும் கனரக இயந்திரங்கள் தொழிற்சாலைகளை அரசாங்கமே நடத்தத் திட்டம்
👉நில மற்றும் பங்கீட்டை முதன்மைப்படுத்துதல்
👉விவசாயக் கிணறுகள்
👉அணைகள் கட்டுதல்
👉விவசாய உற்பத்தியை பெருக்க உரங்கள் உபயோகிக்கும் முறையை செயல்படுத்தியது
👉அணு ஆற்றலில் இந்தியா சிறந்து விளங்கும் திட்டங்கள் ஆகியவை குறிப்பிடத்தக்க வரலாற்று நிகழ்வுகளாகும்.
கல்வி திட்டங்கள் :
👉நேரு, 'இந்தியாவின் எதிர்கால முன்னேற்றம், குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் கல்வியை மேம்படுத்துவதில் தான் இருக்கிறது' என்பதை நன்கு உணர்ந்தார்.
👉அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம்,
👉இந்திய தொழில்நுட்ப கழகங்கள்,
👉இந்திய மேலாண்மை கழகங்கள்,
👉தேசிய தொழில்நுட்ப கழகங்கள் போன்ற அரசாங்க உயர்கல்வி நிறுவனங்களை ஏற்படுத்தி கவனித்து வந்தார்.
👉இலவச கட்டாய கல்வி திட்டத்தை செயல்படுத்தி ஆயிரக்கணக்கான பள்ளிகளை கட்டினார்.
👉சிறந்த கிராமப்புறத் திட்டங்களை ஏற்படுத்தி, பள்ளிகளில் இலவச சத்துணவு திட்டத்தையும் அமல்படுத்தினார்.
👉தாழ்த்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு, அரசுப்பணிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டினை ஏற்படுத்தினார்.
நேருவின் வெளியுறவு கொள்கைகள் :
👉நேரு அவர்கள், பல பிரச்சனைகளை திறம்பட சமாளித்து தீர்த்ததால், உலக பார்வையில் 'சமாதானப்படுத்துவதில் மன்னர்' என்றும் ஐக்கிய நாடுகளின் வலுவான ஆதரவாளராகவும் போற்றப்பட்டார்.
👉நேரு இந்திய வெளியுறவு கொள்கையின் சிற்பி எனப் போற்றப்படுகிறார். இந்திய மற்றும் சீன உறவை பேணுவதற்காகவும், அண்டை நாடுகளோடு நட்புறவை நிலை நிறுத்துவதற்காகவும் பஞ்சசீல கொள்கையை வெளியிட்டார்.
பஞ்சசீல கொள்கை :
👉நாடுகள் ஒன்றுக்கொன்று பிரதேச ஒருமைப்பாட்டையும், இறையாண்மையையும் மதித்தல்
👉ஆக்கிரமிப்பை தவிர்த்தல்
👉பிற நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடாமல் இருத்தல்
👉சமத்துவம்
👉பரஸ்பர உதவி மற்றும் சமாதான சகவாழ்வு ஆகியவையே பஞ்சசீல கொள்கைகளாகும்.
அணிசேரா இயக்கம் :
👉அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே இரண்டாம் உலகப் போருக்கு பின் பனிப்போர் நிலவிய நிலையில் நேரு இரு நாடுகளோடும் சேராமல் மூன்றாம் உலக நாடுகள் தனி அமைப்பாக செயல்படுவதற்காக அணிசேரா இயக்கத்தை (Non-alignment Movement)தொடங்கினார்.
👉முன்னாள் பிரிட்டிஷ் குடியேற்ற நாடுகளை கொண்ட காமன்வெல்த் அமைப்பில் இந்தியா தொடர்வதற்கு நேரு வழிவகை செய்தார்.
👉நேரு பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச அமைப்புகளால் பதினொரு முறை நோபல் (அமைதி) பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.
👉விண்வெளி மற்றும் அணுசக்தி துறையில் முன்னேற்றத்திற்கான விதைகள் அவர் காலத்திலே போடப்பட்டன. அயல்நாட்டில் இருந்த இந்திய விஞ்ஞானிகள் பலர் நேருவின் வேண்டுகோளால் இந்தியாவில் சேவை செய்ய வந்து சேர்ந்தார்கள்.
நேருவின் மறைவு :
👉நேருவின் ஆட்சிக்காலத்தில் இந்தியாவின் முதலாவது தேசிய ஆய்வுக்கூடமாகிய தேசிய இயற்பியல் ஆய்வுக்கூடமும், அதை தொடர்ந்து மேலும் 17 தேசிய ஆய்வுக்கூடங்களும் ஏற்படுத்தப்பட்டன. 1948ஆம் ஆண்டு ஹோமி ஜஹாங்கீர் பாபா தலைமையில் இந்திய அணுசக்தி ஆணையம் நிறுவப்பட்டது.
👉சீனா உடனான போரில் இந்தியா தோல்வி அடைந்ததை அடுத்து பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நேருவின் மீது முதன்முதலாக நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டு வந்தன. ஆனால், தீர்மானம் தோல்வி அடைந்தது.
👉சீனாவைப்பற்றி அவரின் 'உலக வரலாற்றுத்துளிகள் (Glimpses of World History)' நூலில் நூற்றுக்கும் மேற்பட்ட குறிப்புகள் காணப்படுகின்றன. அந்த தேசம் திடீர் தாக்குதல் தொடுத்து எல்லை சிக்கலை தீர்க்க பார்த்தது பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதனால் ஐந்து மாதங்களில் மூன்று முறை பக்கவாதத்துக்கு உள்ளாகி இறுதி நாட்களை நோக்கி நகர்ந்தார்.
👉1964ஆம் ஆண்டு காஷ்மீரிலிருந்து திரும்பிய நேரு பக்க வாதத்தாலும், மாரடைப்பாலும் அவதிப்பட்டார். அவர் 1964, மே 27ஆம் தேதி அதிகாலை இறைவனடி சேர்ந்தார். அவருடைய உடல், யமுனை நதிக்கரையில் உள்ள சாந்திவனத்தில் தகனம் செய்யப்பட்டது. இவரின் மறைவிற்கு ஆயிரக்கணக்கான மக்கள் மௌன அஞ்சலி செலுத்தினர்.
நேருவின் இறுதி ஆசை :
👉நான் இறந்த பிறகு எனது உடலை எரியூட்ட வேண்டும். எந்தவிதமான மதச்சடங்குகளும் செய்யக்கூடாது. அவற்றில் எனக்கு நம்பிக்கையும், உடன்பாடும் இல்லை.
👉கொஞ்சம் சாம்பலை எடுத்து கங்கையில் கரையுங்கள். கங்கையில் கரைக்கச் சொல்வது மத நம்பிக்கையினால் அல்ல. கங்கை நான் நேசித்த ஜீவநதி. அதனோடு சங்கமிக்க விரும்புகிறேன்.
👉மிச்சமிருக்கிற சாம்பலை இந்தியாவின் வயல்கள் எங்கும் தூவுங்கள். உழவர்கள் உழுது தானியங்களை விளைவிக்கும் அந்த மண்ணோடு மண்ணாக, இந்தியத் திருநாட்டின் காற்றோடு காற்றாகக் கலந்து கிடக்க விரும்புகிறேன் என்றார்.
👉ஒரு சுதந்திரமான, சமத்துவமான ஜனநாயக நாட்டை உருவாக்க வேண்டும் என்ற நேருவின் கனவுதான் இந்தியாவிற்கு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது என்றால் அது மிகையாகாது.
நேருவின் படைப்புகள் :
👉விடுதலையை நோக்கி (Toward Freedom)
👉கண்டுணர்ந்த இந்தியா (Discovery of India)
👉உலக வரலாற்றுத் துளிகள் (Glimpses of World History)
நேருவின் பெயரை பறைச்சாற்றும் நினைவுச்சின்னங்கள் :
👉இந்தியா முழுவதும் கல்விநிலையங்கள், விளையாட்டு அரங்கங்கள், தெருக்கள், சாலைகள் மற்றும் பல பொது நிறுவனங்களுக்கு நேருவின் பெயர் சூட்டப்பட்டு அவருடைய நினைவைப் பறைச்சாற்றுகின்றன.
👉1989ஆம் ஆண்டு, சோவியத் ஒன்றியத்தால் நேருவின் தபால் தலை வெளியிடப்பட்டது.
👉மும்பையில் உள்ள ஒரு துறைமுகத்திற்கு 'நேரு துறைமுகம்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
👉நேரு பிரதமராக இருந்தபோது, அவர் வசித்து வந்த 'தீன் மூர்த்தி பவன்', தற்போது அவர் நினைவாக அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு, இந்திய அரசால் பராமரிக்கப்பட்டு வருகிறது.
👉லண்டனில் உள்ள ஆல்ட்விச்சில் நேருவிற்கு சிலை எழுப்பப்பட்டுள்ளது.
👉நேரு அவர்கள், வாழ்நாள் முழுவதும் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் நலன், கல்வி மற்றும் அக்கறையுடன் பாடுபட்டதை நினைவூட்டும் வகையில் அவரின் பிறந்தநாளான, நவம்பர் 14ம் தேதியை இந்தியா முழுவதும் 'குழந்தைகள் தினமாக' கொண்டாடுகிறோம்.
பெரியார் வாழ்க்கை வரலாறு
இயற்பெயர் : ஈ. வெ. இராமசாமி நாயக்கர்
பிறப்பு : 17-09-1879
இறப்பு : 24-12-1973
பெற்றோர் : வெங்கட்ட நாயக்கர் நாயுடு, முத்தம்மாள் என்கிற சின்னத்தாயம்மாள்
இடம் : ஈரோடு, தமிழ்நாடு
வகித்த பதவி : அரசியல்வாதி, சமூக சேவகர்
விருதுகள் : யுனஸ்கோ
வரலாறு:-வாழ்க்கை வரலாறு
பெரியார் என அனைவராலும் அழைக்கப்படும் ஈ.வெ. ராமசாமி அவர்கள், எழுச்சியூட்டும் அரசியல்வாதியாக மட்டுமல்லாமல் சமூக சீர்திருத்ததிற்காவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், சாதி வேற்றுமைகளை அகற்றுவதற்காகவும் போராடிய மிகப்பெரிய பகுத்தறிவாளர். தமிழகத்தின் மிகப்பெரிய கழகமான திராவிடர் கழகத்தை தோற்றுவித்தவர். பெண் விடுதலைக்காகவும், சாதி மற்றும் பாலின சமத்துவம் போன்ற கொள்கைக்காகவும், திராவிடர்கள் பார்பனரல்லாதார் என்ற காரணத்தால் புறக்கணிக்கப்படுவதையும் எதிர்த்துப் போராடிய சமூக சீர்திருத்தத்தின் தந்தை. தென்னிந்தியாவின் சாக்ரட்டிஸ் என்றும் இந்தியாவின் கண்ணிராத பகுத்தறிவு சிற்பி என்றும் போற்றப்பட்டவர் ஈ.வெ. ராமசாமி அவர்கள்.
பிறப்பு:
ஈ.வெ. ராமசாமி அவர்கள், 1879 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் நாள் வெங்கட்ட நாயக்கருக்கும், சின்னதாயம்மைக்கும் மகனாக இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஈரோடு மாவட்டத்தில் பிறந்தார். இவருடைய இயற்பெயர், ஈரோடு வெங்கட்ட இராமசாமி நாயக்கர். இவருக்கு கிருஷ்ணசாமி என்ற சகோதரனும், கண்ணம்மா மற்றும் பொன்னுதாயி என்ற சகோதரிகளும் இருந்தனர். இவருடைய குடும்பம் வசதியான வணிக பின்னணியைக் கொண்டதாக இருந்தது.
ஆரம்ப வாழ்க்கை:
தனது படிப்பை ஐந்தாம் வகுப்புவரை முடித்துகொண்ட ஈ.வெ.ரா, அதன் பின் கல்வி பயில விருப்பம் இல்லாததால் தன்னுடைய 12 வது வயதில் தந்தையின் வணிகத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். தன்னுடைய இளம் வயதிலேயே, தனது பகுத்தறிவு சிந்தனையால், திராவிடத்தை சதியால் அடக்கியாண்ட ஆரியத்தை பல கேள்விகள் கேட்கத் தொடங்கினார். அவருடைய 19 வது வயதில், 13 வயது நிரம்பிய நாகம்மையாரை மணந்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு நாகம்மையார் தன்னுடைய கணவரின் புரட்சிக்கு முழுவதுமாக தன்னை அற்பணித்துக்கொண்டார். திருமணமான இரண்டு ஆண்டுகளில் ஒரு பெண்குழந்தை பிறந்தது. ஆனால், அந்த குழந்தை ஐந்து மாதங்களிலேயே இறந்துவிட்டது. 1902 ஆம் ஆண்டுகளில் கலப்புத் திருமணங்களை நடத்திவைத்தார். அனைத்து சமய, சாதியினருடனும் சேர்ந்து விருந்துண்டார். இதனால் இவருக்கும், இவருடைய தந்தைக்கும் மனக்கசப்பு ஏற்பட்டது. பின்னர், இவருடைய பகுத்தறிவு செயல்களை ஏற்கமுடியாத தந்தையின் கண்டனத்தால் துறவு பூண்டு காசிக்கு சென்றார்.
காசிக்கு பயணம்:
காசியில் அவருக்கு நடந்த நிகழ்வு அவரின் எதிர்கால புரட்சிகர சிந்தனைக்கு வித்திட்டது. பெரியாருக்கும் அவரது தந்தைக்கும் ஏற்பட்ட மனக்கசப்பால் காசிக்கு சென்ற அவருக்கு, அங்கு பிராமணரல்லாதார் வழங்கும் நிதியில் நடத்தப்படும் அன்னசத்திரத்தில் உணவு மறக்கப்பட்டு வீதியில் தள்ளப்பட்டார். இந்த நிலைமையை எண்ணி மிகவும் வருந்தினார். பின்னர் குப்பைத் தொட்டியில் விழும் எச்சில் இலைகளின் உணவை உண்டு பசியாற்றினார். அதுமட்டுமல்லாமல், காசியில் வேசிகளின் வேசமும், திராவிடர்கள் பிச்சைகாரர்களாக இருப்பதையும் மற்றும் புனித கங்கையில் பிணங்கள் மிதப்பதையும் கண்ட அவர் அன்றிலிருந்து இறைமறுப்பாளராக(ஒரு நார்த்திகவாதியாக) தன்னை மாற்றிக் கொண்டார்.
ஆரம்பகால அரசியல் வாழ்க்கை:
காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளில் ஈடுபாடுகொண்ட பெரியார், 1919 ஆம் ஆண்டு தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொண்டார். காந்தியடிகளின் கொள்கைகளை பின்பற்றியது மட்டுமல்லாமல் பிறருக்கும் எடுத்துக்கூறினார். வெளிநாட்டு துணிகளை விற்பனை செய்யும் வணிகர்களுக்கு எதிராக மறியல் போராட்டங்களையும் நடத்தினார். 1921 ஆம் ஆண்டில் கடைகளை மூட வலியிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட அவர், தன்னுடைய தோட்டத்திலிருந்த 500 தென்னைமரங்களை வெட்டிச்சாய்த்தார். இப்போராட்டத்தில், கைது செய்யப்பட்டு சிறைதண்டனையும் பெற்றார். 1921-1922-ல் ஒத்துழையாமை மற்றும் மிதமாக மதுகுடித்தல் சட்டங்களை எதிர்த்து மறியலில் ஈடுபாட்ட அவர், மீண்டும் கைதுசெய்யப்பட்டார். 1922-ல் சென்னை மாகாண காங்கிரஸ் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், திருப்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் அரசுப் பணிகளிலும், கல்வியிலும் இடஒதுக்கீட்டை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினார். ஆனால், இது இனவேற்றுமையை பிரதிபலிப்பதாக அமைவதால் அன்றைய காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்கள் ஏற்க மறுத்தனர். இதனால் பெரியார் 1925- ல் அக்கட்சியை விட்டு விலகினார்.
வைக்கம் போராட்டம்:
பெரியாருக்கு காந்தியின் கொள்கைகளில் ஒரு வலுவான நம்பிக்கை இருந்தது. கேரளாவில் வைக்கம் என்னும் ஊரில் அரிசன மக்கள் என்றழைக்கப்படும் தலித் மக்களும், ஈழவர்களும் கோயில் இருக்கும் வீதிகளில் நடக்கவும் கோயிலுக்குள் நுழையவும் தடைவிதிக்கப்பட்டிருந்தது. 1924 ஆம் ஆண்டு டி.கே. மாதவன் அவர்கள், இதை எதிர்த்து காந்திய வழியில் சத்தியாகிரக போராட்டத்தை தொடங்கினார். இப்போராட்டத்தில், நாடெங்குமுள்ள காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் கலந்துகொண்டு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். தமிழகத்தின் சார்பாக தந்தை பெரியார் கலந்துகொண்டார் பின்னர், கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டார். அவருடைய துணைவியான நாகம்மையாரும் இப்போராட்டத்தில் பங்கேற்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பெரியார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டபோதிலும், அவருடைய தொண்டர்கள் கைவிடாது போராட்டத்தை தொடர்ந்ததால் வெற்றியும் கிட்டியது. இந்த போராட்டதிற்கு பிறகு பெரியார் ‘வைக்கம் வீரர்’ என தமிழக மக்களால் அழைக்கப்பட்டார்.
சுயமரியாதை இயக்கம்:
1925 ஆம் ஆண்டு பெரியாரால் சுயமரியாதை இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது. இந்த இயக்கத்தின் முக்கிய கொள்கையே ‘மூடபழக்க வழக்கங்களை சமுகத்தில் மக்களிடம் இருந்து அகற்றுவதை’ நோக்கமாக கொண்டு செயல்பட்டது. தீண்டாமை, மூடநம்பிக்கை, வர்ணாஸ்ரம தர்மம் கடைபிடிக்கும் பார்ப்பனியம், பெண்களை தாழ்வாக கருதும் மனநிலை போன்றவற்றை எதிர்த்து குரல்கொடுத்தார். தென்னிந்தியாவில் பழம்பெருமை வாய்ந்த திராவிடர்கள் பார்பனரல்லாதார் என்ற காரணத்தால் புறக்கணிக்கப்படுவதையும், அவர்களால் திராவிடர் வாழ்வு சுரண்டப்படுவதையும், பெரியார் எதிர்த்தார். கைம்பெண் மறுமணம் போன்ற புரட்சி திருமணங்களை நடத்திக்காட்டியது மட்டுமல்லாமல் கலப்பு திருமணமுறையையும் இவ்வியக்கம் ஆதரித்தது. கோயில்களில் சட்டத்திற்கு புறம்பாக பின்பற்றப்படும் தேவதாசி முறையையும், குழந்தைகள் திருமணத்தையும் தடைசெய்தது. அரசு நிர்வாகப் பணி மற்றும் கல்வி ஆகியவற்றில் இடஒதுக்கீடு முறையை கடைபிடிக்க இவ்வியக்கம் வலியுறுத்தியது. பின்னர், தன்னுடைய கொள்கைகளையும் சிந்தனைகளையும் பரப்புவதற்கு ‘குடியரசு நாளிதழை’ 1925 ஆம் ஆண்டு தொடங்கினார். சுயமரியாதை இயக்கம், வெகுவேகமாக வளர்ந்தது மட்டுமல்லாமல், மக்களின் ஆதரவையும் பெற்றது. சுயமரியாதையாளர்கள் ஈரோடு மற்றும் பிற மாவட்டங்களிலும், மாநாடுகளும், கூட்டங்களும் நடத்தப்பட்டு மக்களிடைய விழிப்புணர்வை ஏற்படுத்தினர். 1929 முதல் 1932 வரை மலேசியா, ரஷ்யா, ஐரோப்பா, பிரான்ஸ், ஜெர்மனி, கிரிஸ், சிங்கப்பூர், இலங்கை, மேலும் பல வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு தன்னுடைய சுயமரியாதைக் கொள்கைகளை விளக்கிக்கூறினார்.
இந்தி எதிர்ப்பு:
1937 ஆம் ஆண்டு சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் சென்னை மாநிலத்தின் முதலமைச்சராக பதவியேற்றபிறகு ‘இந்தி’ கட்டாயமொழியாக பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் தமிழகம் முழுவதும் எதிர்ப்புகளும், போராட்டங்களும் வெடித்தன. இந்தி பேசும் வடஇந்தியர்களிடமிருந்து தமிழர்களை பிரித்து இரண்டாம் தர குடிமக்களாக காட்டுவது மட்டுமல்லாமல், தமிழர்களின் முன்னேற்றத்தையும், பண்பாட்டையும் சிதைத்துவிடும் என வலியுறுத்தி 1938- ல் நீதிக்கட்சியின் சார்பாக பெரியார் மற்றும் சர்.ஏ.டி. பன்னீர் செல்வம் தலைமையில் நடந்த போராட்டத்தில் பெரியாருடன் பலர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். 1939 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்ட பெரியார் ‘நீதிக்கட்சியின்’ (1916 ஆம் ஆண்டு பிராமணர்களின் ஆதிக்கத்திற்கு எதிராக தொடங்கப்பட்ட தென்னிந்திய நலஉரிமை சங்கம் என்ற அரசியல் கட்சி பின்னாளில் நீதிக்கட்சியாக மாறியது) தலைவராக பொறுப்பேற்றார். அவரது தலைமையில் நீதிக்கட்சி பெரும் வளர்ச்சிப்பெற்றது. இருப்பினும், நீதிக்கட்சியில் பெரும்பாலான உறுப்பினர்கள் செல்வந்தராகவும், கல்வியறிவு பெற்றவர்களாகவும் இருந்ததால், பெரியாரின் கீழ் செயல்பட மனமில்லாமல் கட்சியிலிருந்து விலகினார்.
பெரியாரின் திராவிட கழகம்:
பெரியார் அவர்கள், நீதிக்கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற பிறகு ‘நீதிக்கட்சி’ என்ற பெயரை 1944-ல் ‘திராவிட கழகம்’ என பெயர் மாற்றினார். திராவிட கழகத்தின் கொள்கைகள் வெகு விரைவில் மக்களிடத்தில் சேர்ந்தது. திராவிடர் கழகம், சமுகத்தில் பரவிக் கிடந்த தீண்டாமையை ஒழிப்பதிலும், சுயமரியாதை, சாதி எதிர்ப்பு, பகுத்தறிவு, இறைமறுப்பு, பெண் உரிமை மற்றும் பெண்கல்வி போன்றவற்றையும் வலியுறுத்தி தொடங்கப்பட்ட ஒரு சமூக இயக்கமாகும். ‘கருப்பு சதுரத்தின் நடுவே சிவப்பு வட்டம்’ என்பதே திராவிட கழகத்தின் கொடியாக இருந்தது.
பெரியாருக்கும் அண்ணாவிற்கும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு:
பெரியாரின் திராவிட கழகம், சமுதாய மறுமலர்ச்சி, விழிப்புணர்வு, மூடநம்பிக்கை ஒழிப்பு, கடவுள் மறுப்பு போன்ற கொள்கைகளை சார்ந்து இருந்ததால், திராவிட கழகத்தை அரசியல் கட்சியாக மாற்ற பெரியார் விரும்பவில்லை. அதுமட்டுமல்லாமல், ‘திராவிடநாடு’ அல்லது ‘தனி தமிழ்நாடு’ என்ற கோரிக்கையையும் முன்வைத்தார். ஆனால் கா.ந. அண்ணாதுரை மத்திய அரசுடன் இணைக்கமாக இருந்து கொண்டு கூடுதல் அதிகாரங்களை கொண்ட மாநில சுயாட்சியை பெறுவதில் அக்கறை காட்டினார். இதனால் இருவருக்குமிடைய கருத்துவேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது. திராவிட கழகத்தின் தொண்டர்களும், உறுப்பினர்களும் கழகத்திலிருந்து விலக சரியான நேரத்தை எதிர்நோக்கி காத்திருந்தபொழுது, ஜூலை 9, 1948 ஆம் ஆண்டு பெரியார் தன்னைவிட 40 வயது இளையவரான மணியம்மையை மறுமணம் புரிந்து கொண்டதை காரணம் காட்டி, அண்ணாதுரை தலைமையிலான திராவிட கழகத்திலிருந்து விலகினார். பின்னர் கா.ந. அண்ணாதுரை தனது வழிகாட்டியான பெரியாரிடமிருந்து பிரிந்து, 1949 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்ற கழகம் (தி.மு.க) என்ற புதிய கட்சியை தொடங்கினார்.
இறுதிகாலம்:
இந்து மத மூடநம்பிக்கைகளை அறவே எதிர்த்த பெரியார், 1952-ல் பிள்ளையார் உருவ பொம்மைகளை உடைத்தது மட்டுமல்லாமல், 1956 ஆம் ஆண்டு இந்துக்களின் கடவுளாக கருதப்பட்ட ராமரின் உருவப்படம் எரிப்புப் போராட்டத்தையும் நடத்தி, கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், 1962 -ல் திராவிட கழகத்தின் பொதுச்செயலாளராக கி. வீரமணியை நியமித்தார். மக்களுக்குள் சுயமரியாதை, சமத்துவம், சகோதரத்துவம் ஓங்கி வளரவேண்டும் என்று கடைசிவரை போராடிய பெரியாரின் கடைசி கூட்டம் 1973 டிசம்பர் 19 ஆம் தேதி சென்னை தியாகராஜர் நகரில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் ‘சாதிமுறையையும், இழிவுநிலையையும் ஒழித்துக்கட்ட திராவிடர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபடவேண்டும்’ என்று முழக்கமிட்டு தன்னுடைய கடைசி உரையை முடித்துக்கொண்டார்.
புனைபெயர்கள்:
இவருடைய சமுதாய பங்களிப்பைப் பாராட்டி ‘யுனஸ்கோ நிறுவனம்’ ஜூன் 27, 1973 ஆம் ஆண்டு பெரியாரை ‘புத்துலக தொலைநோக்காளர்’, ‘தென்னிந்தியாவின் சாக்ரட்டிஸ்’, ‘சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை’ என பாராட்டி விருது வழங்கியது. அறியாமை, மூடநம்பிக்கை, அர்த்தமற்ற சம்பிரதாயங்கள், மட்டமான பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின் ‘கடும் எதிரி’, ‘பகுத்தறிவு பகலவன்’, ‘வைக்கம் வீரர்’ மற்றும் ‘தந்தை பெரியார்’ என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறார்.
இறப்பு:
‘பகுத்தறிவின் சிற்பி’,‘அறிவு பூட்டின் திறவுகோல்’, எதையும் ‘ஏன்? எதற்கு? எப்படி?’ என்று கேட்கவைத்தவர், மூட நம்பிக்கையை ஒழித்துத் தன்னம்பிக்கையை விதைத்தவர், உலகின் மாபெரும் சுயசிந்தனையாளரும், அழியாத வரலாற்றின் அறிஞருமான தந்தை பெரியார், டிசம்பர் 24, 1973 ஆம் ஆண்டு தனது 94 வது வயதில் காலமானார்.
பல நூற்றாண்டு கால வரலாற்றை வெறும் இருபது வருடங்களில் நிகழ்த்திக்காட்டிய வரலாற்றுத் தேடல்; மனிதகுல வரலாற்றில் தன் மக்களின் விடியலுக்காகப் போராடிய மாபெரும் விரர்; இந்திய விடுதலையில் பங்காற்றி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராயிருந்து, மதுவிலக்குக் கொள்கைகளை காந்திக்கு எடுத்துரைத்து, சுயமரியாதை இயக்கம் கட்டமைத்து, சீர்திருத்த திருமணம் என்ற ஒரு புதிய வாழ்க்கை ஒப்பந்த முறையை சட்டமாக்கி, தன் தமிழினம் தலைநிமிர்ந்து வாழ வகைசெய்த பகுத்தறிவு பகலவன், திராவிடம் என்கிற பல நூற்றாண்டு கால வரலாற்றின் ‘வெற்றி நாயகன்’ என இன்னும் சொல்லிக்கொண்டே போகக்கூடிய அரும்பணியை ஆற்றிய மாபெரும் சிந்தனையாளர் ‘பெரியார்’.
மகாத்மா காந்தி வரலாறு
பிறப்பு : 02-10-1869
இறப்பு : 30/01/1948
பெற்றோர் : கரம்சந்த் உத்தம்சந்த் காந்தி, புத்திலிபாய்
இடம் : போர்பந்தர், குஜராத்
வகித்த பதவி : விடுதலை போராட்ட வீரர்
வரலாறு:-மகாத்மா காந்தி!!
👉 மகாத்மா காந்தி அவர்கள், 1869ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 02ஆம் தேதி, குஜராத் மாநிலத்திலுள்ள 'போர்பந்தர்' என்ற இடத்தில் கரம்சாந்த் காந்திக்கும், புத்திலிபாய்க்கும் மகனாக பிறந்தார். காந்தியின் இயற்பெயர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்பதாகும். இவருடைய தாய்மொழி குஜராத்தி ஆகும். மேலும் இவருடைய தந்தை கரம்சாந்த் காந்தி, போர்பந்தரில் ஒரு திவானாக பணியாற்றி வந்தார்.
ஆரம்பக்கல்வி மற்றும் திருமண வாழ்க்கை :
👉 மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள், பள்ளியில் படிக்கும்போதே நேர்மையான மாணவனாக விளங்கினார். பள்ளிப்படிப்பில் ஒரு சுமாரான மாணவனாகவே காணப்பட்டார் காந்தி.
👉 காந்தி தனது 13ஆம் வயதில் கஸ்தூரிபாயை மணந்தார். இவர்களுக்கு நான்கு ஆண் குழந்தைகள் பிறந்தனர்.
👉 ஹரிலால் (1888)
👉 மணிலால் (1892)
👉 ராம்தாஸ் (1897)
👉 தேவதாஸ் (1900)
👉 மோகனதாஸ் கரம்சந்த் காந்தி, தனது 16வது வயதில் தந்தையை இழந்தார்.
👉 தனது 18ஆம் வயதில் பள்ளிப்படிப்பு முடிந்த பிறகு பாரிஸ்டர் (barrister) எனப்படும் வழக்கறிஞர் படிப்பிற்காக காந்தி இங்கிலாந்து சென்றார். தன் படிப்பை வெற்றிகரமாக முடித்து தாயகம் திரும்பிய காந்தி பம்பாயில் சிறிது காலம் வழக்கறிஞராக பணியாற்றினார்.
👉 இது வெற்றிகரமாக அமையாததால் தன் அண்ணன் இருப்பிடமான ராஜ்கோட்டிற்கு சென்ற காந்தி, அங்குள்ள நீதிமன்றத்தில் வழக்காட வருபவர்களின் படிவங்களை நிரப்பும் எளிய பணியில் ஈடுபட்டார்.
👉 ஆனால், அங்கிருந்த ஆங்கிலேய அதிகாரியிடம் ஏற்பட்ட சிறிய தகராறால் இவ்வேலையும் பறிபோனது.
காந்தியின் தென்னாப்பிரிக்க அனுபவம் :
👉 பம்பாய் மற்றும் ராஜ்கோட்டில் சிறிதுகாலம் பணியாற்றிய மகாத்மா காந்தி, 1893ஆம் ஆண்டு ஒரு இந்திய நிறுவனத்தின் உதவியால் தென்னாப்பிரிக்காவில் பணிபுரிய பயணமானார்.
👉 அந்தசமயம் தென்னாப்பிரிக்காவில் ஆங்கிலேயர் ஆட்சியில் நிறவெறியும், இனப்பாகுபாடும் மிகுந்து இருந்தது. அன்றுவரை அரசியல் ஈடுபாடின்றி இருந்த காந்தியின் மனதில் அந்த பயணம் அவருக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல், பின்னாளில் அவரை ஒரு மாபெரும் அரசியல் சக்தியாகவும் மாற்றியது.
👉 டர்பன் நகரில் உள்ள நீதிமன்றத்தில் ஒருநாள் இந்திய வழக்கப்படி தலைப்பாகை அணிந்து வழக்காடச் சென்ற காந்தியிடம் அத்தலைப்பாகையை விலக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
👉 காந்தியோ உத்தரவை எதிர்க்கும் பொருட்டு நீதிமன்றத்தை விட்டு உடனே வெளியேறினார். பிறகு ஒருநாள் பிரிட்டோரியா செல்வதற்காக தகுந்த பயணச்சீட்டுடன் ரயிலில் முதல் வகுப்பு பெட்டியில் பயணம் செய்தார். அவர் ஒரு வெள்ளையர் இல்லை என்ற காரணத்திற்காக, ஆங்கிலேய அதிகாரி ஒருவரால் ரயில் பெட்டியிலிருந்து தூக்கி எறியப்பட்டார்.
👉 வெள்ளையர் அல்லாத ஒரே காரணத்தால் இதுபோன்று பல இன்னல்களை காந்தி அனுபவித்தார். இதன்மூலம் தென்னாப்பிரிக்காவின் கறுப்பின மக்களும், அங்கே குடியேறிய இந்தியர்களும் படும் இன்னல்களை காந்தி நன்கு உணர்ந்தார்.
👉 தனது ஒப்பந்தக்காலம் முடிவடைந்து இந்தியா திரும்ப காந்தி தயாரானபோது, அங்குள்ள இந்தியரின் வாக்குரிமையை பறிக்கும் தீர்மானத்தை இயற்ற இருப்பதாக செய்தித்தாளில் படித்தறிந்தார்.
👉 இதை எதிர்க்குமாறு காந்தி அவரது இந்திய நண்பர்களிடம் அறிவுறுத்தினார். அவர்களோ, தங்களிடம் இதற்கு தேவையான சட்ட அறிவு இல்லையென கூறி காந்தியின் உதவியை நாடினர்.
👉 காந்தியும் அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்கி, தன் தாயகம் திரும்பும் முடிவை மாற்றிக்கொண்டு இத்தீர்மானத்தை எதிர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். இதன்மூலம் அங்குள்ள இந்தியர்களிடம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
👉 மகாத்மா காந்தி, 1894ஆம் ஆண்டு நாட்டல் இந்திய காங்கிரஸ் என்ற பெயரில் கட்சி தொடங்கி அதற்கு அவரே பொறுப்பாளரானார். இதன்மூலம் நாட்டல் மாகாணத்திலிருந்த இந்தியர் அனைவரையும் ஒன்று திரட்டி, அவர்களை தங்கள் உரிமைக்காக குரலெழுப்ப ஊக்கப்படுத்தினார்.
👉 1906ஆம் ஆண்டு ஜோகன்னஸ்பேர்க் நகரில் நடந்த ஒரு போராட்டத்தில் முதன்முறையாக சத்தியாகிரகம் எனப்படும் அறவழி போராட்டத்தை பயன்படுத்தினார். அகிம்சை, ஒத்துழையாமை, கொடுக்கப்படும் தண்டனையை ஏற்றல் ஆகிய கொள்கைகள் இவ்வறவழி போராட்டத்தின் பண்புகளாகும்.
👉 இந்த காலக்கட்டத்தில் காந்தியும் அவருடன் சேர்ந்து போராடியவர்களும் பலமுறை சிறை சென்றனர். தொடக்கத்தில் ஆங்கில அரசாங்கம் இவர்களை எளிதாக அடக்கியது போல் தோன்றியது.
👉 பின்னர் பொதுமக்களும், ஆங்கில அரசாங்கமும் இவர்களின் உண்மையான மற்றும் நேர்மையான வாதங்களை புரிந்துகொண்டு இவர்களுடைய கோரிக்கைகளை ஏற்கும் நிலை ஏற்பட்டது. இவ்வாறு தனது அறவழி போராட்டத்தின் மூலம் தென்னாப்பிரிக்க வாழ் இந்தியரின் சமூக நிலையை மேம்படுத்தும் முயற்சியில் வெற்றி கண்ட காந்தி தாயகம் திரும்பினார்.
👉 1915ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி மும்பை துறைமுகத்தில் காந்தி இறங்கியபோது உடையில் அடியோடு உருமாறியிருந்தார். தழையத் தழையக் கட்டிய மில் வேட்டி, தொள தொள ஜிப்பா, அங்கவஸ்திரம், தலையில் பெரிய முண்டாசு போன்றவற்றை துறந்து ஒரு விவசாயி உடையில் காட்சியளித்தார்.
👉 அப்பல்லோ பந்தர் துறைமுகத்தில் இறங்கிய காந்தி - கஸ்தூரிபா தம்பதி வெளியே வந்தபோது ஒரு கோலாகல வரவேற்பளிக்க, மிதவாத அரசியல் தலைவர் கோபாலகிருஷ்ண கோகலே ஏற்பாடு செய்திருந்தார்.
👉 மேல் விரிப்பு திறந்த மோட்டார் காரில் காந்தியையும், அவரது மனைவியையும் அமரச் செய்து ஊர்வலமாக இட்டுச் சென்றார். (காந்தி தாயகம் திரும்பிய நாளை அடிப்படையாகக் கொண்டு ஜனவரி 9ஆம் தேதியை வெளிநாடு வாழ் இந்தியர் தினமாக 2002ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டது.)
இந்திய விடுதலை போராட்டத்தில் காந்தி :
👉 தென்னாப்பிரிக்காவில் காந்தி தலைமையேற்று நடத்திய போராட்டங்களை பற்றி இந்திய மக்கள் அறிந்திருந்தனர். காந்திக்கு, கோபால கிருஷ்ண கோகலே, ரவீந்திரநாத் தாகூர் போன்றோருடன் நட்பு ஏற்பட்டது.
👉 காந்தி இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலை போராட்டத்தில் முழு வீச்சில் ஈடுபட்டார்.
👉 இதன்மூலம் இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தின் தலைவராக காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். தலைமையேற்றவுடன் காங்கிரசில் பல மாற்றங்களை அறிமுகப்படுத்தி இயக்கத்திற்கு புத்துயிர் ஊட்டினார்.
👉 அறப்போராட்ட வழிமுறைகளையும், சுதேசி போன்ற கொள்கைகளையும் வலியுறுத்தி காங்கிரஸ் இயக்கத்தை இந்தியாவின் மாபெரும் விடுதலை இயக்கமாக்கினார்.
ஒத்துழையாமை இயக்கம் :
👉 ரவ்லத் சட்டம் மற்றும் ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு குரல் கொடுக்கவும், இந்திய அரசு சட்டத்தில் இந்தியருக்கு வழங்கப்பட்டிருந்த குறைவான அதிகாரங்களை ஏற்க மறுத்தலை வெளிக்காட்டவும், காந்தி ஒத்துழையாமை இயக்கத்தினை 1920ஆம் ஆண்டு தொடங்கினார்.
👉 ஆங்கில அரசிடமிருந்து பெற்ற பதவிகளையும், பட்டங்களையும், விருதுகளையும் துறத்தல்,
👉 வேலைநிறுத்தம், அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் சட்டமன்ற நடவடிக்கைகள் அனைத்தையும் புறக்கணித்தல்,
👉 வரி செலுத்துவதை மறுத்தல் போன்ற கருத்துக்கள் ஒத்துழையாமை இயக்கத்தில் வலியுறுத்தப்பட்டன.
👉 இளையத் தலைமுறை மற்றும் தேசியவாதிகளிடையே இந்த இயக்கம் பெரும் ஆதரவைப் பெற்றது மட்டுமல்லாமல், ஒத்துழையாமை இயக்கத்தின் வெற்றியால், காந்தி இந்திய தேசிய காங்கிரஸின் தனிப்பெரும் தலைவராக உருவெடுத்தார்.
👉 1922ல் உத்திரப் பிரதேசத்தில் சௌரி சௌரா என்ற இடத்தில் விடுதலை இயக்கத்தினருக்கும், காவல்துறையினருக்கும் மோதல்கள் ஏற்பட்டன.
👉 காவல்துறையினரின் செயல்பாட்டால் சில விடுதலை இயக்கத்தினர் மரணமடைந்தனர். இதனால் கோபம் கொண்ட மற்றவர்கள் காவல்நிலையத்தை தீயிட்டு கொளுத்தினர். இதில் 22 காவல்துறையினர் கொல்லப்பட்டனர். இதனால் வன்முறை இந்தியாவின் வேறு சில பகுதிகளுக்கும் பரவியது.
👉 அறவழியில் நடந்து வந்த இயக்கம் வன்முறை பாதையில் செல்வதை கண்ட காந்தி அதிர்ச்சியடைந்தார். ஒத்துழையாமை இயக்கம் வன்முறை இயக்கமாக மாறுவதை தடுக்க, அதனை நிறுத்தி கொள்வதாக அறிவித்தார். வன்முறை ஓயும் வரை மூன்று வாரங்கள் உண்ணாநிலை போராட்டமொன்றை நடத்தினார். இதனால் ஒத்துழையாமை இயக்கம் வலுவிழந்து நின்று போனது.
👉 வன்முறையை தடுக்க காந்தி பாடுபட்டாலும், அரசு அவர் மீது ஆட்சி விரோத எழுத்துக்களை வெளியிட்டார் என்று குற்றம் சாட்டி ஆறாண்டுகள் சிறையில் அடைத்தது. இதையடுத்து இரண்டே ஆண்டுகளில் காந்தி விடுதலை ஆனார்.
காந்தியின் தண்டி யாத்திரை :
👉 1930ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு, இந்தியாவில் தயாரிக்கப்படும் உப்புக்கு வரி விதித்தது. மேலும், இந்தியாவில் தயாரிக்கப்படும் உப்பை பிரிட்டிஷ் அரசாங்கத்தை தவிர வேறு யாரும் விற்கக்கூடாது என்ற சட்டத்தையும் இயற்றியது. இதை விலக்கிக் கொள்ளுமாறு காந்தி பிரிட்டிஷாரிடம் விடுத்த கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது.
👉 இதனை ஏற்க மறுத்த காந்தியடிகள், 'தன்னுடைய நாட்டில் விளைந்த பொருளுக்கு அன்னியர் வரி விதிப்பதா?' எனக் கருதி, சத்தியாகிரக முறையில் இதை எதிர்க்க முடிவு செய்தார்.
👉 1930ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் தேதி குஜராத்தின் தண்டியில், ஆங்கிலேயரின் எதிர்ப்பையும் தாண்டி உப்பு எடுப்பதற்காக இந்த நடைபயணம் துவங்கியது. சபர்மதி ஆசிரமத்திலிருந்து 240 மைல் தூரத்திலுள்ள தண்டிக்கு மகாத்மா காந்தி வழிநடத்திய இந்தப் பயணம் 23 நாட்கள் நீடித்தது. 4 மாவட்டங்கள் மற்றும் 48 கிராமங்கள் வழியே கடந்து சென்றது இப்பயணம்.
👉 காந்தியின் சபர்மதி ஆசிரமத்தில் இருந்த 78 சத்தியாகிரகிகளுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பயணம் நிறைவுபெறும்போது சுமார் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்டவர்களை உள்ளடக்கியிருந்தது.
👉 இறுதியில் தண்டியை வந்தடைந்த அவர், அங்கிருந்த கடல் நீரில் உப்பு காய்ச்சி ஆங்கில சட்டத்திற்கு எதிராக அதை விநியோகித்தார். இந்த நிகழ்வு இந்தியாவில் பல இடங்களில் பரவியது மட்டுமல்லாமல், போராட்டம் தீவிரம் அடைந்து காந்தி உட்பட பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
👉 ஆனால், போராட்டம் தீவிரம் அடைவதைக் கண்ட ஆங்கில அரசு, வேறு வழியில்லாமல் காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்கள் விதித்த உப்புவரியை திரும்பப் பெற்று கொண்டனர். 'உப்பு சத்தியாகிரகம்' என்ற இந்நிகழ்வு இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது என கூறலாம்.
வெள்ளையனே வெளியேறு இயக்கம் :
👉 1942ஆம் ஆண்டு மகாத்மா காந்தி, மும்பையில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில், 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தை தொடங்கினார்.
👉 இது 'ஆகஸ்ட் புரட்சி' எனவும் அழைக்கப்பட்டது. சுதந்திரத்தை லட்சியமாக கொண்டு, ஒத்துழையாமை இயக்கம் முன்னிலைப்படுத்தப்பட்டது. அறவழியில் போராட வேண்டும் என்பதை காந்தி வலியுறுத்தினார்.
👉 'செய் அல்லது செத்து மடி' என்ற தாரக மந்திரத்தை உணர்ச்சி பொங்க காந்தி முழங்கினார். அதற்கு அடுத்த நாளே காந்தி, நேரு போன்ற தேசத் தலைவர்கள் பலரும் சிறையில் அடைக்கப்பட்டனர். அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டி தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கப்பட்டது. பொதுக் கூட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டது.
👉 இதனால் வெள்ளையரை எதிர்த்து நாடெங்கும் கிளர்ச்சிகள் நடைபெற்றன. 1,00,000 நபர்களுக்கு மேல் சிறையில் அடைக்கப்பட்டனர். சுதந்திரத்திற்காக இந்தியர்களை ஒரே அணியில் திரள வைத்த பெருமை வெள்ளையனே வெளியேறு இயக்கத்தையே சேரும்.
👉 காந்தியின் மன உறுதியையும், அகிம்சை பலத்தையும் கண்டு ஆங்கில அரசு திகைத்தது. இறுதியில் காந்தியின் இடைவிடாத போராட்டத்தால், இந்தியாவிற்கு சுதந்திரம் அளிக்க பிரித்தானிய அரசு முன்வந்தது. ஆனால் அதற்கு பின் காந்திக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.
இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை :
👉 இந்தியாவில் எங்களுக்கு நியாயம் கிடைக்காது என்பதால் எங்களுக்கு தனிநாடு வேண்டும் என்று வாதிட்டது முஸ்லிம்களின் பிரதிநிதியான முஸ்லிம் லீக் கட்சி.
👉 காந்திக்கு இதில் துளிகூட சம்மதமில்லை. ஆனால் நேருவும், பட்டேலும் வேறு வழியில்லை என்று கூறினர். எனவே காந்தியை வேதனையில் மூழ்கடித்துவிட்டு பாரதத்தை இந்தியா, பாகிஸ்தான் என்று இரண்டாகப் பிரிக்க முடிவெடுக்கப்பட்டது.
👉 பல போராட்டங்களுக்குப் பின் ஒரு வழியாக 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது. டெல்லி செங்கோட்டையில் பீரங்கிகள் முழங்க பல தலைவர்களும், மக்களும் அணி திரண்டு மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தனர். தங்கள் சுதந்திர தாகம் தீர்ந்ததை எண்ணி குதூகளித்தனர்.
👉 ஆனால் அந்த சுதந்திரத்திற்கு எவர் அடிப்படை காரணமாக விளங்கினாரோ அவர் அந்தக்கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.
👉 சுதந்திரம் கிடைத்த மகிழ்ச்சியைவிட நாடு இரண்டாக பிளவுபட்டதை எண்ணிக் கலங்கிய காந்தியடிகள் அன்றைய தினம் டெல்லியைவிட்டு வெகுதொலைவில் உள்ள கல்கத்தாவில் உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்தார். தன் கடைசி மூச்சுவரை அந்த பிரிவினையால் துயருற்றியிருந்தார் காந்தியடிகள்.
👉 காந்தியடிகள் அஞ்சியதுபோலவே இந்தியாவும், பாகிஸ்தானும் சுதந்திரம் அடைந்த ஒருசில தினங்களுக்குள்ளாகவே இந்தியாவிலிருந்து லட்சக்கணக்கான முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்கும், பாகிஸ்தானிலிருந்து லட்சக்கணக்கான இந்துக்கள் இந்தியாவிற்கும் இடம் பெயர்ந்தனர்.
👉 தன் வாழ்நாள் முழுவதும் இந்து - முஸ்லிம் ஒற்றுமையையும், ஒன்றுபட்ட சுதந்திர இந்தியாவையுமே கற்பனை செய்து வந்த காந்தியடிகள் ஒடிந்துபோனார். கசப்புணர்வு மேம்பட்டிருந்தாலும் அப்போதும்கூட அவர் எல்லாவற்றையும் வெறுத்து ஒதுக்கிவிட்டு ஒதுங்கிவிடவில்லை. மதக்கலவரத்தால் துவண்டு போயிருந்த மக்களுக்கு ஆறுதலும், அமைதியும் கூற 'நவக்காளி' யாத்திரை மேற்கொண்டார்.
காந்தியின் மரணம் :
👉 1948ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் தேதி புதுதில்லியில் ஒரு பிரார்த்தனை கூட்டத்தில் கலந்துகொள்ள வந்திருந்தார் காந்தியடிகள்.
👉 சரியாக 10 நாட்களுக்கு முன்னர் அதேபோன்ற ஒரு பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொண்டபோது ஓர் இளைஞன் காந்தியடிகளை நோக்கி குண்டு வீசினான். அதில் காயமின்றி தப்பிய காந்தியடிகள் அந்த இளைஞனை மன்னித்து விடுமாறு கூறி, போலீஸார் வழங்க முன்வந்த கூடுதல் பாதுகாப்பையும் நிராகரித்துவிட்டார்.
👉 உயிருக்கு ஆபத்து என்று தெரிந்திருந்தும் ஜனவரி 30ஆம் தேதி இன்னொரு பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொண்டார்.
👉 அப்போது எதிர்பாராத விதமாக கைக்கூப்பியிருந்த காந்தியடிகளை நோக்கி மூன்று குண்டுகள் பாய்ந்தது. அதன்பின் கைகள் கூப்பிய நிலையில் 'ஹேராம்... ஹேராம்' என்ற வார்த்தைகளை உதிர்த்தவாறு இந்திய நேரப்படி மாலை சுமார் 5 மணிக்கு தேசப்பிதாவின் உயிர் பிரிந்தது.
👉 ஆங்கில ஆட்சிக்கு எதிராகவும், இந்திய விடுதலைக்காகவும் அந்நியப் பொருட்கள் புறக்கணிப்பு, உப்பு சத்தியாகிரகம், வரி கொடா இயக்கம், ஒத்துழையாமை இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் என பலப் போராட்டங்களை அறவழியில் முன்னெடுத்து நடத்தி வெள்ளையர்களை திகைக்கச் செய்தவர். பாரத நாட்டிற்காக தன்னுடைய உயிரையும் காணிக்கையாக்கிய மகாத்மாவின் வாழ்க்கை வரலாறு உலக சரித்திரத்தில் எழுதப்பட்ட அழியா சுவடுகள் ஆகும்.
காந்திஜி பற்றிய தகவல்கள் :
👉 முதன்முதலில் 'தேசத்தந்தை' என்று காந்தியை அழைத்தவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், 'மகாத்மா' என்று அழைத்தவர் ரவீந்திரநாத் தாகூர்!
👉 காந்தி தொடங்கிய 'இந்தியன் ஒப்பீனியன்' குஜராத்தி, இந்தி, தமிழ் மற்றும் ஆங்கிலம் என நான்கு மொழிகளில் வெளியானது.
👉 தாழ்த்தப்பட்ட மக்களுக்கு காந்தி வைத்த பெயர்தான் 'ஹரிஜன்' என்பது, அதன் பொருள் 'கடவுளின் குழந்தைகள்' என்பதாகும்.
👉 'உடற்பயிற்சியின் அரசன் நடைப்பயிற்சி' என்று சொன்ன காந்தி, லண்டனில் சட்டம் பயிலும்போது ஒரு நாளைக்கு 10 மைல்கள் நடந்தே சென்று பணத்தை மிச்சப்படுத்தி படித்தார்.
👉 காந்தி துறவியை போன்றவர். ஆனால், அவரிடம் நகைச்சுவை உணர்வுக்கு பஞ்சமே இருந்தது இல்லை. ஒருமுறை லண்டனுக்கு சென்றபோது, பிரிட்டிஷ் அரசரை முதலும் கடைசியுமாக சந்தித்தார் காந்தி.
👉 ஆறாம் ஜார்ஜ் மன்னரை சந்தித்துவிட்டு பக்கிங்ஹாம் அரண்மனையைவிட்டு அவர் வெளியில் வந்தபோது, அவரைப் பத்திரிக்கையாளர்கள் சூழ்ந்துகொண்டனர். அதில் ஒருவர், 'இவ்வளவு குறைவான ஆடையுடன் வந்திருக்கிறீர்களே குளிரவில்லையா' என்று கேட்டார். அதற்கு காந்தி 'எங்கள் இருவருக்கும் தேவையான அளவு ஆடைகளையும் சேர்த்து மன்னரே அணிந்திருந்தார்' என்று பதில் அளித்தாராம்.
👉 வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின்போது, காந்தி சொன்ன வாக்கியம்தான்..... 'செய் அல்லது செத்து மடி!'
👉 கொள்கை இல்லாத அரசியல், வேலை செய்யாமல் வரும் செல்வம், மனசாட்சியை ஏமாற்றி வரும் இன்பம், பண்பு இல்லாத அறிவு, நியாயம் இல்லாத வணிகம், மனிதம் மறந்த அறிவியல், தியாகம் இல்லாத வழிபாடு இவை காந்தி குறிப்பிட்ட ஏழு சமூக பாவச் செயல்கள்.
👉 தபால் அட்டைகள்தான் உலகத்திலேயே மிகவும் சிக்கனமான தகவல் தொடர்பு சாதனம் என்று கருதியவர் காந்தி.
👉 கடிதங்கள் மிக நேர்த்தியாக மடிக்கப்பட்ட பின்பே உறையில் இட வேண்டும் என்பதில் உறுதியுடன் இருப்பார். காரணம், கடிதம் மடிக்கப்பட்டு இருக்கும் முறையிலேயே உங்களைப்பற்றிய அபிப்ராயம் தோன்றிவிடும் என்பார்.
👉 யாருக்குக் கடிதம் எழுதினாலும் 'தங்களின் கீழ்ப்படிந்த சேவகன்' என்று எழுதியே கடிதத்தை முடிப்பார்.
👉 கிழிந்த துணிகளைத் தானே தைத்துக்கொள்வார். எவ்வளவுதான் வறுமையில் ஒருவர் இருந்தாலும், உடுத்துகின்ற உடைகள் மிகத் தூய்மையாக இருக்க வேண்டும் என்பார். அதை அவரும் கடைபிடித்தார்.
👉 காந்திஜி ஒவ்வொரு இரவும் நாட்குறிப்பு எழுதும் பழக்கம் கொண்டவராக இருந்தார். அதுதான் பின்னாளில் அவரின் சுயசரிதையாகவும் மலர்ந்தது.
👉 'சட்ட மறுப்பு இயக்க போராட்டத்தை கைவிடுங்கள்' என்று வெள்ளையர்கள் சொன்னபோது, அதற்கு காந்தி, தன் 11 அம்சத் திட்டத்தை ஏற்றுக்கொண்டால், போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்தார். அதில் 11வதாக இருந்த திட்டம், 'சுய பாதுகாப்புக்கு தேவையான வெடி பொருட்களையும், ஆயுதங்களையும் தயாரித்து கொள்வதற்கான உரிமம் வழங்குதல் ஆகும்.' அகிம்சையை போதித்தவருக்குள் எப்படி இந்த எண்ணம் உதித்தது என்பது இன்று வரை பலரின் கேள்வி.
👉 எந்த நிலையிலும் ஆங்கிலேயரை உடல் அளவில் காயப்படுத்துவதை அவர் அனுமதிக்கவில்லை. 'நாம் அவர்களை எதிர்த்து போராடவில்லை. அவர்கள் நம்மீது திணிக்கும் அதிகாரத்தைத்தான் எதிர்க்கிறோம்' என்று அதற்கு விளக்கம் அளித்தார்.
👉 தான் தவறு செய்தால், அதற்காக மௌன விரதம் ஏற்பதும்... பிறர் தவறு செய்தால், அந்த தவறு செய்தவர் அதை உணர தான் உண்ணாவிரதம் இருப்பதையும் வாடிக்கையாக கொண்டிருந்தார் மகாத்மா காந்தி.
👉 ஆரம்ப காலங்களில், ஆசிரமத்தில் நடக்கும் தினசரி பிரார்த்தனை கூட்டங்களில், 'கடவுள் உண்மையானவர்!' என்று சொல்லி வந்தார். விடுதலை போராட்டம் உச்சத்தில் இருந்தபோது, 'உண்மையே கடவுள்' என்று மாற்றிக்கொண்டார்.
👉 'என்னிடம் சீடனாக வந்து சேர்ந்த குரு' என்று காந்தி அழைத்தது வினோபாபாவேவைத்தான்.
👉 இந்தியா சுகந்திரம் அடைந்தபோது, அதைக் கொண்டாட மறுத்தவர்கள் இரண்டு பேர். ஒருவர் காந்தி, இன்னொருவர் தந்தை பெரியார்.
Saturday, 23 January 2021
‘பெருந்தலைவர் காமராஜர்’. தமிழகத்தை ஒன்பது ஆண்டு காலம் ஆட்சிசெய்த இவருடைய காலம், தமிழக அரசியல் வரலாற்றில் ‘பொற்காலமாக’ கருதப்படுகிறது.
இயற்பெயர் : காமாட்சி
பிறப்பு : 15-07-1903
இறப்பு : 02-10-1975
பெற்றோர் : குமாரசாமி, சிவகாமிஅம்மையார்
இடம் : விருதுநகர், தமிழ்நாடு, இந்தியா
வகித்த பதவி : தமிழக முன்னாள் முதல்வர்
விருதுகள் : பாரத ரத்னா விருது
வரலாறு:-வாழ்க்கை வரலாறு
தமிழ்நாட்டை ஆண்ட முதலமைச்சர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவராக கருதப்படுபவர், ‘பெருந்தலைவர் காமராஜர்’. தமிழகத்தை ஒன்பது ஆண்டு காலம் ஆட்சிசெய்த இவருடைய காலம், தமிழக அரசியல் வரலாற்றில் ‘பொற்காலமாக’ கருதப்படுகிறது. பள்ளிக்குழந்தைகளுக்கு இலவச மதிய உணவு திட்டத்தினை ஏற்படுத்தி, ஏழை எளிய மக்களின் கல்வியில் முன்னேற்றத்தினை ஏற்படுத்தினார். தன்னுடைய உழைப்பால், தொண்டால், படிப்படியாக உயர்ந்த இவர், ‘பெரும் தலைவர்’, ‘தென்னாட்டு காந்தி’, ‘படிக்காத மேதை’, ‘கர்ம வீரர்’, ‘கல்விக்கண் திறந்த காமராஜர்’ என பல்வேறு சிறப்பு பெயர்களால் அழைக்கப்படுகிறார்.
சமுதாயத்தில், தாழ்த்தப்பட்டோர் மற்றும் ஏழைகளுக்கு நல்லது செய்யும் அவரின் தன்னலமற்ற தொண்டிற்காக, இந்திய அரசு, அவரின் மறைவிற்கு பின்னர் 1976 ஆம் ஆண்டு ‘பாரத ரத்னா’ விருதினை வழங்கியது. இந்தியாவின் மதிக்கத்தக்க இரண்டு பிரதம மந்திரிகளை உருவாக்கி, இந்தியாவின் ‘கிங்மேக்கராகப்’ போற்றப்படுபவர் காமராஜர்.பிறப்பு:
கு. காமராஜர் அவர்கள், 1903 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15 ஆம் நாள், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ‘விருதுநகரில்’ குமாரசாமி நாடாருக்கும் சிவகாமியம்மாவுக்கும் மகனாக பிறந்தார். இவருடைய இயற்பெயர் ‘காமாட்சி’. அவருடைய தாயார் மிகுந்த நேசத்துடன், அவரை ‘ராஜா’ என்று அழைப்பார். அதுவே, பின்னர் (காமாட்சி + ராஜா) ‘காமராஜர்’ என்று பெயர் வரக் காரணமாகவும் அமைந்தது.
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி:
காமராஜர் அவர்கள், தனது ஆரம்பக்கல்வியை தனது ஊரிலேயே தொடங்கி, 1908 ஆம் ஆண்டில் ‘ஏனாதி நாராயண வித்யா சாலையில்’ சேர்க்கப்பட்டார். பின்னர் அடுத்த வருடமே விருதுப்பட்டியிலுள்ள உயர்நிலைப்பள்ளியான ‘சத்ரிய வித்யா சாலா பள்ளியில்’ சேர்ந்தார். அவருக்கு ஆறு வயதிருக்கும் பொழுது, அவருடைய தந்தை இறந்ததால், அவரின் தாயாரின் நகைகளை விற்றுக் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தன்னுடைய பள்ளிப்படிப்பை தொடரமுடியாத நிலைக்கு தள்ளப்பட்ட காமராஜர், தன்னுடைய மாமாவின் துணிக்கடையில் வேலைக்குச் சேர்ந்தார்.
விடுதலைப் போராட்டத்தில் காமராஜரின் பங்கு:
டாக்டர் வரதராஜுலு நாயுடு, கல்யாணசுந்தர முதலியார் மற்றும் ஜார்ஜ் ஜோசப் போன்ற தேசத்தலைவர்களின் பேச்சுக்களில் கவரப்பட்ட காமராஜர் சுதந்திரப் போராட்டத்திலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். ‘ஹோம் ரூல் இயக்கத்தின்’ ஒரு அங்கமாக மாறிய அவர், பல போராட்டங்களிலும் கலந்துகொண்டார். பிறகு, இந்திய நேஷனல் காங்கிரஸில் முழு நேர ஊழியராக, 1920 ஆம் ஆண்டில், தனது 16வது வயதில் சேர்ந்தார். உப்பு சத்யாக்ரஹத்தின் ஒரு பகுதியாக, 1930 ஆம் ஆண்டு, சி. ராஜகோபாலாச்சாரி தலைமையில் வேதாரண்யத்தை நோக்கி நடந்த திரளணியில் பங்கேற்று, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அடுத்த ஆண்டே, ‘காந்தி இர்வின் ஒப்பந்தத்தின்’ அடிப்படையில் விடுதலைசெய்யப்பட்டார்.
மேலும், ‘ஒத்துழையாமை இயக்கம்’, ‘வைக்கம் சத்தியாக்கிரகம்’, ‘நாக்பூர் கொடி சத்தியாகிரகம்’ போன்றவற்றில் பங்கேற்ற காமராஜர் அவர்கள், சென்னையில், ‘வாள் சத்தியாக்கிரகத்தைத்’ தொடங்கி, நீல் சிலை சத்தியாகிரகத்திற்குத் தலைமைத் தாங்கினார். மேலும், ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக நடந்த அனைத்து போராட்டங்கள், மற்றும் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்ற அவர், ஆறு முறை சிறையில் அடைக்கப்பட்டு, ஒன்பது ஆண்டுகள் சிறைதண்டனை அனுபவித்தார்.
காங்கிரஸ் தலைவர் சத்திய மூர்த்தியுடன் ஏற்பட்ட நல்லுறவு:
‘காங்கிரஸ் தலைவர்’, ‘இந்திய விடுதலை வீரர்’, ‘இந்திய அரசியலில் மக்களாட்சி நெறிமுறைகளை ஆழமாக வேரூன்ற செய்தவர்’, ‘மிகச் சிறந்த பேச்சாளர்’ எனப் புகழப்பட்ட சத்தியமூர்த்தி அவர்களை தன்னுடைய அரசியல் குருவாக மதித்தார். 1936 ஆம் ஆண்டு சத்திய மூர்த்தி காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற போது, காமராஜரை செயலாளராக நியமித்தார். இந்தியா விடுதலை அடைவதற்கு முன்பே, சத்திய மூர்த்தி அவர்கள் இறந்துவிட்டார், ஆனால் காமராஜர் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, முதலில் சத்திய மூர்த்தி வீட்டிற்குச் சென்று தேசியக்கொடியை ஏற்றினார். அதுமட்டுமல்லாமல், காமராஜர் தமிழக முதலமைச்சராக பதவி ஏற்பதற்கு முன், சத்திய மூர்த்தியின் வீட்டுக்குச் சென்று அவருடைய படத்திற்கு மாலை அணிவித்து வணங்கி, தன்னுடைய பணியைத் தொடர்ந்தார்.
தமிழக முதல்வராக காமராஜர்:
1953 ஆம் ஆண்டு, ராஜாஜி கொண்டுவந்த குலக்கல்வி திட்டத்தால், எதிர்ப்புகள் கிளம்பியது. இதனால், ராஜாஜியின் செல்வாக்கு குறைந்ததோடு மட்டுமல்லாமல், காங்கிரஸ் கட்சி உள்ளேயும் மதிப்புக் குறைந்தது. இதனால், ராஜாஜி அவர்கள் பதவியிலிருந்து விலகி, தன் இடத்திற்கு சி. சுப்பிரமணியத்தை முன்னிறுத்தினார். ஆனால், கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில், காமராஜர் பெருவாரியான வாக்குகளைப் பெற்றதால், 1953 ஆம் ஆண்டு தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றார்.
முதல்வராக காமராஜர் ஆற்றிய பணிகள்:
காமராஜர், தன்னுடைய அமைச்சரவையை மிகவும் வித்தியாசமாகவும் வியக்கும் படியும் அமைத்தார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட சி.சுப்பிரமணியத்தையும், அவரை முன்மொழிந்த எம். பக்தவத்சலத்தையும் அமைச்சராக்கினார். முதல்வரான பின்னர், தன்னுடைய முதல் பணியாக ராஜாஜி கொண்டுவந்த குலக்கல்வித் திட்டத்தினை கைவிட்டு, அவரால் மூடப்பட்ட 6000 பள்ளிகளைத் திறந்தார். மேலும், 17000-த்திற்கும் மேற்பட்ட பள்ளிகளைத் திறந்ததோடு மட்டுமல்லாமல், பள்ளிக்குழந்தைகளுக்கு ‘இலவச மதிய உணவு திட்டத்தினை’ ஏற்படுத்தி, ஏழை எளிய மக்களின் கல்வியில் முன்னேற்றத்தினை ஏற்படுத்தினார். இந்திய அரசியலில் தலைச்சிறந்த பணியாக கருதப்பட்ட இந்தத் திட்டம், உலக அளவில் பாராட்டப்படும் திட்டமாகவும் அமைந்தது எனலாம். இதனால், ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில் 7 சதவீதமாக இருந்த கல்விக் கற்போரின் எண்ணிக்கை, இவருடைய ஆட்சியில் 37 சதவீதமாக உயர்ந்தது.
அவர் காலத்தில் தமிழகத்தில் தொடங்கப்பட்ட முக்கிய பொதுத் துறை நிறுவனங்களும் பெருந்தொழிற்சாலைகளும்:
பாரத மிகு மின் நிறுவனம்
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்
மணலி சென்னை சுத்திகரிப்பு நிலையம் (MRL இதன் தற்போதைய பெயர் CPCL)
இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலை (ICF)
நீலகிரி புகைப்படச் சுருள் தொழிற்சாலை
கிண்டி மருத்துவ சோதனைக் கருவிகள் தொழிற்சாலை
மேட்டூர் காகிதத் தொழிற்சாலை
அகில இந்திய காங்கிரஸ் தலைவராக காமராஜர் :
மூன்று முறை தமிழக முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட காமராஜர் அவர்கள், பதவியை விட தேசப்பணியும், கட்சிப்பணியுமே முக்கியம் என கருதி ‘கே-ப்ளான் (K-PLAN)’ எனப்படும் ‘காமராஜர் திட்டத்தினை’ கொண்டுவந்தார். அதன்படி, கட்சியின் மூத்த தலைவர்கள் பதவிகளை, இளைஞர்களிடம் ஒப்படைத்துவிட்டு, கட்சிப்பணியாற்ற வேண்டும் என்பது இதன் நோக்கமாகும். அதன் பேரில் அக்டோபர் 2, 1963 ஆம் ஆண்டு தன்னுடைய முதலமைச்சர் பதவியைத் துறந்த காமராஜர் பொறுப்பினை பக்தவத்சலத்திடம் ஒப்படைத்துவிட்டு, தில்லிக்குச் சென்றார். பிறகு, அதே ஆண்டில் அக்டோபர் 9 ஆம் தேதி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றார். இத்திட்டத்தினை நேரு போன்ற பெரும் தலைவர்கள் ஏற்றுக்கொண்டது மட்டுமல்லாமல், லால்பகதூர் சாஸ்திரி, மொரார்சி தேசாய் செகசீகன்ராம், எசு.கே. பட்டேல் போன்றோர் பதவியைத் துறந்து இளைஞர்களிடம் ஒப்படைத்தனர். இதனால், கட்சியினரிடமும், தொண்டர்களிடமும், மக்களிடமும் மரியாதைக்குரிய ஒருவராக மாறி, அனைவருக்கும் முன்மாதிரியாகவும் திகழ்ந்தார். 1964 ஆம் ஆண்டு, ஜவகர்லால் நேரு மரணமடைந்தவுடன், லால்பதூர் சாஸ்திரி அவர்களை இந்திய பிரதமராக முன்மொழிந்தார். பிறகு, 1966 ஆம் ஆண்டு லால்பதூர் சாஸ்திரியின் திடீர் மரணத்தைத் தழுவ, 48 வயது நிரம்பிய நேருவின் மகள் இந்திராகாந்தியை இந்தியாவின் அடுத்த பிரதம மந்திரியாக்கினார், காமராஜர்.
இறப்பு:
தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் சமூகத்தொண்டு செய்வதிலேயே அர்பணித்துக்கொண்ட காமராஜர் அவர்கள், 1975 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி தன்னுடைய 72 வது வயதில் காலமானார். அதற்கு அடுத்த ஆண்டு, இந்திய அரசின் மிக உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருது மத்திய அரசால் அவருக்கு வழங்கப்பட்டது. சமூகத் தொண்டையே பெரிதாக நினைத்து வாழ்ந்த அவர், கடைசிவரை திருமணம் செய்துகொள்ளாமலே வாழ்ந்தார். ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தபொழுதும் இறுதிவரை வாடகை வீட்டிலேயே வாழ்ந்து இருந்தார். அவருக்காக அவர் சேர்த்து வைத்த சொத்து சில கதர் வேட்டிகள், சட்டைகள், புத்தகங்கள் மற்றும் 150 ரூபாய் மட்டுமே. இப்படிப்பட்ட உன்னதமான நேர்மையான இன்னொரு தலைவனைத் தமிழக வரலாறு மட்டுமல்ல, உலக வரலாறும் இனி சந்திக்குமோ என்பது சந்தேகமே? இந்தியாவின் மதிக்கத்தக்க இரண்டு பிரதமர்களை உருவாக்கி, ‘இந்தியாவின் கிங்மேக்கராகத்’ திகழ்ந்த பெருந்தலைவர் காமராஜர், ‘பகைவர்களும் மதிக்கும் பண்பாளராகவும்’, ‘படிக்காத மேதையாகவும்’, ‘கல்வியின் நாயகனாகவும்’, ‘மனிதநேயத்தின் மறுஉருவமாகவும்’ திகழ்ந்தார். சினிமாவில் நாம் பார்த்து ஆச்சரியப்படும் ஹீரோக்களைப் போல இல்லாமல், நிஜ வாழ்க்கையில் உண்மையான ஹீரோவாக வாழ்ந்துக் காட்டியவர். அரசியலில் நேர்மை, வாய்மை, தூய்மை, நாணயம் என அனைத்தையும் கற்பித்த மாமனிதராக மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த இந்தியாவிற்கே வழிகாட்டும் தலைவராக விளங்கியவர்.
Thursday, 21 January 2021
பா சிதம்பரம் வரலாறு
பெயர் : ப. சிதம்பரம்
பிறப்பு : 16-09-1945
பெற்றோர் : பழனியப்பசெட்டியார், லட்சுமிஇடம் : கண்டனூர், சிவகங்கை, தமிழ்நாடு
வகித்த பதவி : அரசியல்வாதி
வரலாறு:-வாழ்க்கை வரலாறு
ப. சிதம்பரம் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதியும் , இந்தியாவின் முன்னாள் நிதி மற்றும் உள்துறை அமைச்சர் ஆவார்.
பிறப்பு:
இவர் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சிவகங்கை மாவட்டம் கண்டனூர் கிராமத்தில் நாட்டுக்கோட்டைச் செட்டியார் சமுதாயத்தில் பழனியப்பசெட்டியார், லட்சுமி தம்பதிக்கு செப்டம்பர் 16,1945ஆம் நாள் மகனாகப் பிறந்தார். இவரது மனைவி பெயர் நளினி. இவருக்கு கார்த்தி என்ற மகன் உள்ளார்.
கல்வி:
சென்னை கிருத்தவக் கல்லூரி பள்ளியில் படிப்பு. சென்னை மாநிலக்கல்லூரியில் பி.எஸ்.சி. (புள்ளியியல்) சென்னை சட்டக் கல்லூரியில் பி.எல். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ.
அரசியல் வாழ்க்கை:
இவர் அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினராகவும், தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவராகவும், தமிழக இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளராகவும், இருமுறை மத்திய இணை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். இருமுறை மத்திய நிதி அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். இவர் 1984 முதல் முறையாக மக்களவையின் உறுப்பினராகச் சிவகங்கை மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தொழில் முறையில் வழக்கறிஞரான இவர் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. படித்தவர். காங்கிரஸிலிருந்து பிரிந்து சிலகாலம் காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை என்ற கட்சியை நடத்திவந்தார். பின்னர் மீண்டும் காங்கிரஸில் இணைந்தார்.
மத்திய நிதி அமைச்சராக இதுவரை 8 பட்ஜெட்களையும், 1 இடைக்கால பட்ஜெட்டையும் சிதம்பரம் அவர்கள் தாக்கல் செய்துள்ளார். மொரார்ஜி தேசாய்க்கு அடுத்து அதிக பட்ஜெட்களைத் தாக்கல் செய்தவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். 1997–98ஆம் ஆண்டு இவர் தாக்கல் செய்த பட்ஜெட், கனவு பட்ஜெட் என்று பத்திரிக்கைளால் போற்றப்பட்டது.
Wednesday, 20 January 2021
சாதனை சிங்கப் பெண் கல்பனா சாவ்லா
பெயர் : கல்பனா சாவ்லா
பிறப்பு : 17.03.1962 சான்றிதழில் 01.07.1961
இறப்பு : 01.02.2003
பெற்றோர் : பனாரஸ் லால் சாவ்லா, சன்யோகிதா தேவி
இடம் : கர்னல், ஹரியானா
வகித்த பதவி : விண்வெளி வீராங்கனை
விருதுகள் : Congressional Space Medal of Honor, NASA Space Flight Medal, NASA Distinguished Service Medal
வரலாறு:-கல்பனா சாவ்லா
🕵 இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா 1962ஆம் ஆண்டு மார்ச் 17ஆம் தேதி ஹரியானா மாநிலத்தில் உள்ள கர்னல் என்ற நகரத்தில் பிறந்தார். இவருடைய பள்ளி சான்றிதழ்களில் 1961ஆம் ஆண்டு, ஜூலை 1ஆம் தேதி பிறந்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
🕵 இவர் பனாரஸ் லால் சாவ்லாவுக்கும், சன்யோகிதா தேவிக்கும் மகளாக பஞ்சாபி குடும்பத்தில் பிறந்தார். இவருக்கு சுனிதா மற்றும் தீபா என்ற இரண்டு சகோதரிகளும், சஞ்சய் என்ற சகோதரனும் இருந்தனர். கல்பனாவே இக்குடும்பத்தின் கடைக்குட்டி ஆவார். சமஸ்கிருதத்தில் கல்பனா என்றால் "கற்பனை" என்று பொருள்.
🕵கல்பனா சாவ்லா சிறுவயது முதலே தலைக்கு மேலே விமானம் பறப்பதை ரசித்துக்கொண்டே இருப்பார். ஒருமுறை கல்பனா சாவ்லா தனது தந்தையிடம், ஃபிளையிங் கிளப்புக்கு (flying club) அழைத்து செல்லும்படி கேட்டார். ஃபிளையிங் கிளப்பில் கல்பனா சாவ்லா விமானத்தை வியந்து பார்ப்பார். மேலும், விமானத்தில் பயணம் செய்தார். அதற்குப் பிறகு விமானம் மீதான காதல் கல்பனா சாவ்லாவிடம் மேலும் அதிகரித்தது.
கல்வி :
🕵 இவர் தனது தொடக்க கல்வியை கர்னலில் உள்ள தாகூர் பள்ளியில் தொடங்கினார். இந்தியாவின் தலைச்சிறந்த விமான ஓட்டியும், தொழில் அதிபருமான ஜெ.ஆர்.டி.டாடாவை பார்த்ததிலிருந்து கல்பனா சாவ்லாவிற்கு விமானம் ஓட்டும் ஆர்வம் ஏற்பட்டது.
🕵 பள்ளி பருவத்திலேயே தான் ஒரு விமானியாக வேண்டும் என்ற லட்சியத்தை வளர்த்துக்கொண்டார். பள்ளியில் முதல்நிலை மாணவியாக திகழ்ந்த கல்பனா சாவ்லா எதிர்காலத்தில் விண்வெளி பொறியாளராக ஆக வேண்டும் என்று விரும்பினார். அதற்காக ஆராய்ச்சியாளர்கள், சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாறுகளை விரும்பி படித்தார்.
🕵கல்பனாவின் விருப்பத்திற்கு அவரது பெற்றோர்கள் தடைவிதித்தனர். காரணம் அப்போதைய காலத்தில் விமான பொறியியல் என்பது ஆண்கள் மட்டுமே கற்கும் ஒரு பிரிவாக இருந்தது. துணிந்து அந்த பிரிவை தேர்தெடுத்த கல்பனாவின் பிடிவாதம் பெற்றோரை சம்மதிக்க வைத்தது.
🕵 1982ஆம் ஆண்டு சண்டிகரில் உள்ள "பஞ்சாப் பொறியியல் கல்லூரியில்" விமானப் பொறியியலில் துறையில் கல்வி பயின்று இளங்கலை பட்டமும் பெற்றார். அதன்பின் பல்வேறு தடைகளை தாண்டி மேற்படிப்புக்கு அமெரிக்கா சென்றார்.
🕵 ஆகாயத்தை பற்றியே கனவு கண்டுகொண்டிருந்த கல்பனா சாவ்லாவை அமெரிக்கா விரும்பி அழைத்தது. பின்னர், 1984ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள "டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில்" விண்வெளிப் பொறியியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றார்.
🕵 பின்னர், 1986-ல் கொலராடோ பல்கலைக்கழகத்தில் இரண்டாவது முதுகலைப் பட்டமும் பெற்றார். அங்கேயே தொடர்ந்து பயின்று 1988ஆம் ஆண்டு விண்வெளி பொறியியலில் முனைவர் பட்டத்தை பெற்றார்.
நாசாவில் பணி :
🕵 தனது கனவை நனவாக்கி கொள்ள கல்வித்துறையில் தொடர்ச்சியாக முன்னேறி கொண்டிருந்த கல்பனா சாவ்லாவிற்கு 1988ஆம் ஆண்டில் அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவில் ஆய்வு விஞ்ஞானியாக தொழில் வாய்ப்பு கிடைத்தது.
🕵 இலக்குகளை அடைவதற்காக தான் செல்லும் பாதை சரிதான் என்பதை உறுதிப்படுத்தி கொண்ட கல்பனா சாவ்லா அங்கே எளிய மொழியில் விளக்குவதற்கு கடினமான கம்பியூட்டேசினல் புலூயிட் டயினமிக்ஸ் (computational fluid dynamics) எனும் படிமுறை தீர்வு மற்றும் எண்சார் பகுப்பியல் வழிமுறைகள் மூலம் பாய்ம ஓட்டங்களை ஆராயும் பாய்ம இயக்கவியல் தொடர்பாகவும், செங்குத்தாக குறுகிய இடத்தில் புறப்படுதல் மற்றும் தரையிறங்கல் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.
🕵 விமானம் மற்றும் கிளைடேர்களை (gliders) ஓட்டக் கற்றுக்கொடுக்க கல்பனா சாவ்லா தகுதி சான்றிதழ் பெற்றார். ஒன்று மற்றும் பல பொறிகள் பொருத்திய விமானங்கள், கடல் விமானங்கள் மற்றும் கிளைடேர்களையும் ஓட்ட அனுமதி பெற்றிருந்தார்.
🕵 1991ஆம் ஆண்டு அமெரிக்க குடியுரிமை கிடைத்ததும், நாசாவில் விண்வெளி வீரர்களுக்கான பயிற்சி விண்ணப்ப படிவத்தை அனுப்பி வைத்தார். தனது விண்ணப்பத்திற்கு பதில் கிடைக்க தாமதமானதால், 1993ஆம் ஆண்டு ஒரு தனியார் நிறுவனத்தில் ஆய்வு விஞ்ஞானியாக சேர்ந்தார்.
🕵 அதற்கு அடுத்த ஆண்டே கல்பனா சாவ்லாவின் விண்ணப்பத்திற்கு பதில் கிடைத்தது. நாசாவில் விண்வெளி வீரர் பயிற்சி பெறுவதற்கு விண்ணப்பத்திருந்த சுமார் 3,000 பேரில், ஆறு பேர் மட்டுமே தேர்வானார்கள். அவர்களுள் கல்பனா சாவ்லாவும் ஒருவர் என்ற பதில் கிடைத்தது. அன்று முதல் கல்பனா சாவ்லாவின் விண்வெளி வீரர் கனவு நனவாக தொடங்கியது.
🕵 ஜான்ஸன் விண்வெளி தளத்தில் பல்வேறு உடல் மருத்துவ பரிசோதனைகள், கடுமையான நேர்காணல்கள் ஆகியவற்றை கடந்து வெற்றிகரமாக தேர்ச்சி பட்டியலில் இடம்பிடித்தார் கல்பனா சாவ்லா.
முதல் விண்வெளி பயணம் :
🕵 1995ஆம் ஆண்டு பயிற்சிகள் முடிந்து விண்வெளி வீராங்கனையாக தகுதி பெற்ற கல்பனா சாவ்லா தனது முதல் விண்வெளி பயணத்தை 1997ஆம் ஆண்டு மேற்கொண்டார். ஆறு வீரர்களுடன் கொலம்பிய விண்வெளி ஊர்தியான எஸ்.டி.எஸ்-87-ல் பயணம் செய்வதற்கு தேர்வு செய்யப்பட்ட கல்பனா சாவ்லாவிற்கு அதில் ஆராய்ச்சி குறித்த முக்கிய பொறுப்புகளும் தரப்பட்டன.
🕵 திட்டமிட்டப்படி நவம்பர் 1997-ல் 19ஆம் தேதி கல்பனா சாவ்லாவுடன் சேர்த்து ஆறு வீரர்கள் கொண்ட குழு ஃப்ளோரிடாவில் கேப் கெனவரல் முனையிலிருந்து நெருப்பை உமிழ்ந்து கொண்டு விண்ணில் பாய்ந்தது எஸ்.டி.எஸ்-87 என்கின்ற விண்கலம்.
🕵கல்பனா சாவ்லா தனது முதல் பயணத்திலேயே 15 நாட்கள், 12 மணி நேரங்கள் விண்ணில் சுற்றினார். கிட்டத்தட்ட 372 மணி நேரத்திற்கு அதிகமாக 252 முறைகள் பூமியை சுற்றி கொண்டிருந்தார்.
🕵 10.5 மில்லியன் கிலோமீட்டர் தொலைவு பயணத்தில், தரையில் இருந்து கண்சிமிட்டாமல் பார்த்து ரசித்த நட்சத்திரக் கூட்டங்களையும், வானத்தையும் ஒருவித பெருமிதத்தோடு மிக அருகாமையில் சென்று பார்த்தார் கல்பனா சாவ்லா.
🕵கிட்டத்தட்ட 16 நாட்கள் பயணத்தின் இறுதியில் டிசம்பர் 5ஆம் தேதி வெற்றியோடும், பாதுகாப்பாகவும் பூமிக்கு திரும்பினர் அந்த 6 பேர் கொண்ட குழுவினர். இதன்மூலம் விண்வெளிக்கு சென்று வந்த முதல் இந்திய பெண்மணி என்ற பெருமையை பெற்றார் கல்பனா சாவ்லா.
கொலம்பியா விண்கலம் :
முதல் விண்வெளி பயணத்தை வெற்றிகரமாக முடித்த கல்பனா சாவ்லா, அடுத்த ஐந்து ஆண்டுகளில் தன்னுடைய இரண்டாவது பயணத்திற்கு தயாரானார். 2000 மற்றும் 2002ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளக்கூடிய இந்த பயணம் பலதரப்பட்ட தொழில்நுட்ப கோளாறுகளால் காலம் கடத்தப்பட்டது.
🕵 பின்னர், 2003ஆம் ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி விண்வெளி ஆராய்ச்சிக்காக, அமெரிக்காவின் கென்னடி நிலையத்திலிருந்து கொலம்பியா விண்கலம் எஸ்.டி.எஸ்-107 (STS-107) விண்ணிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த விண்கலத்தில் இந்திய வம்சாவளி பெண்ணாகிய கல்பனா சாவ்லா உள்ளிட்ட 7 பேர் பயணித்தனர்.
🕵விண்ணை நெருங்கி கொண்டிருந்த சமயத்தில் பாதுகாப்பு அமைப்பின் ஒரு பகுதி உடைந்து விண்கலத்தின் மீது வேகமாக மோதியது. இதனால் இறக்கையில் ஏற்பட்ட பெரிய துளையை சரி செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனாலும் அதை சரி செய்ய முடியவில்லை. இந்த தகவலை நாசாவிற்கு தெரிவித்தனர். ஆனால் குறைந்த நேரத்தில் வேறு ஒரு விண்கலத்தை அனுப்புவது என்பது சாத்தியமற்ற ஒன்றாக நாசாவிற்கு இருந்தது.
🕵 விண்கலத்தில் பாதிப்புகள் பெரியதாக இருந்தாலும்கூட விண்கலம் வெற்றிகரமாக விண்வெளியை அடைந்தது. புவியையும், விண்வெளியையும் கண்காணித்து 80 ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றுள் விண்வெளி வீரர்களுடைய ஆரோக்கியம், பாதுகாப்பு மற்றும் விண்வெளி தொழில்நுட்ப மேம்பாடு தொடர்பான பல்வேறு தரப்பட்ட பரிசோதனைகளையும் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
🕵 இந்திய வம்சாவளி பெண்ணாகிய கல்பனா சாவ்லா உள்ளிட்ட 7 பேர் பயணித்த கொலம்பியா விண்கலம் STS-107, திட்டமிட்டபடி 16 நாட்கள் (அதாவது 15 நாட்கள், 22 மணிநேரம், 20 நிமிடங்கள், 32 விநாடிகள்) விண்வெளியில் பயணம் செய்த பிறகு பூமிக்கு திரும்பும் நாளும் வந்தது. பிப்ரவரி 1ஆம் தேதி கொலம்பிய விண்கலம் தரையிறங்குவதை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தது நாசா. கென்னடி விண்வெளி மையத்தில் விண்கலம் வழக்கமாக தரையிறங்கும் வழிமுறைகள் பின்பற்றப்பட்டன.
🕵அன்று காலை 9 மணிக்கு சற்று முன்னதாக கட்டுப்பாட்டில் அசாதாரண சூழ்நிலைகள் தென்பட்டன. முதலில் விண்கலத்தின் இடதுபுற இறக்கைகளில் இருந்த உணர்கருவிகள் செயலிழந்தன. பின்னர் இடதுபுற சக்கரத்தில் காற்றழுத்தம் குறைந்து காணப்பட்டது.
🕵 அந்த நேரத்தில் கொலம்பிய விண்கலம் வளிமண்டலத்தை நெருங்கி கொண்டிருந்தது. ஒளியின் வேகத்தில் 18 மடங்கு அதிக வேகத்தில் தரையிலிருந்து 61கி.மீ வேகத்தில் தரையை நோக்கி வந்து கொண்டிருந்தது கொலம்பிய விண்கலம்.
🕵 அச்சமயம் விண்வெளி கட்டுப்பாட்டு மையத்திலிருந்து விண்கலத்தில் உள்ளவர்களுக்கு தொடர்பு கொள்ள பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், பலன் ஏதும் இல்லை. அதேசமயம் விண்கலம் வளிமண்டலத்திற்குள் நுழைந்தது.
🕵 வளிமண்டலத்தில் உள்ள வெப்பக்காற்றுகள் விண்கலத்தின் இடதுபுற இறக்கையின் துளைவழியாக நுழைய தொடங்கியது. இறுதியில் 1500 டிகிரி செல்சியஸ் அளிவிற்கு அதிகமான வெப்பக்காற்று துளையின் வழியாக சென்றதால் விண்கலம் கட்டுப்பாட்டை இழந்தது.
🕵 பூமியில் தரையிறங்குவதற்கு சரியாக 14 நிமிடங்களே இருந்த நிலையில் யாரும் எதிர்பாராத நிலையில் கொலம்பியா விண்கலம் அமெரிக்காவின் டெக்சாஸ் வான்பரப்பில் வெடித்து சிதறியது. விண்கலத்தோடு அந்த விலைமதிப்பற்ற 7 வீரர்களும் வெடித்து சிதறினர். அவர்களின் உடல்களை எங்கெங்கோ தேடி இறுதியில் விண்கலத்தின் உடைந்த பாகங்கள் மட்டுமே கண்டெடுக்கப்பட்டன. இது உலகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
🕵 உலகமே வியக்கும் அளவில் விண்வெளித்துறையில் சாதனை படைத்த கல்பனா சாவ்லாவின் இறப்பு இந்தியாவிற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியது. இந்தியாவின் புகழை உலகம் முழுவதும் கொண்டு சென்றவர்களில் கல்பனா சாவ்லாவும் ஒருவர்.
🕵 கல்பனா சாவ்லா இரண்டு விண்வெளி பயணங்களின் போதும் 30 நாட்கள், 14 மணி நேரங்கள், 54 நிமிடங்களை விண்வெளியில் செலவிட்டு உள்ளார்.
🕵 முதல் விண்கலத்தின் நிறைவில் நட்சத்திரங்களையும், விண்மீன்களையும் நீங்கள் பார்க்கும்போது குறிப்பிட்ட நிலப்பகுதியில் இருந்து பார்ப்பது போல் இருக்காது. சூரிய மண்டலத்தில் இருந்து பார்ப்பது போல் இருக்கும் என்று தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார் கல்பனா சாவ்லா.
இந்திய பிரதமரோடு உரையாடல் :
🕵 அன்றைய இந்திய பிரதமர், கொலம்பிய விண்கலத்தில் பயணித்து கொண்டிருந்த இந்திய விண்வெளி மங்கை கல்பனா சாவ்லாவுடன் தொடர்பினை ஏற்படுத்தி, உங்களால் முழு இந்தியாவும் பெருமையடைகிறது. அதுமட்டுமில்லாமல் தானும் பெருமை கொண்டுள்ளதாக கூறினார். மேலும் உங்களின் மூலம் இந்தியா விண்வெளியில் பயணித்து இருக்கிறது என்றும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
🕵 எங்கள் நோக்கம் வெற்றிகரமானது, நாங்கள் அனைவரும் நன்றாகவே இருக்கிறோம் என்பதே கல்பனா சாவ்லாவின் கடைசி வார்த்தைகள்.
🕵 மரணத்தின் வாசலை நெருங்கி கொண்டிருப்பதை அறியாது, தனக்கே உண்டான சிரிப்போடு அன்றைய இந்திய பிரதமரோடு கல்பனா சாவ்லா கடைசியாக பேசிய காணொளி, அவருடைய மரணத்திற்கு பிறகு ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிகம் கண் கலங்க வைத்தது.
விருதுகளும்... அங்கீகாரங்களும் :
🕵 அமெரிக்கக் காங்கிரசினால் அவருடைய நினைவாக வழங்கப்பட்ட விண்வெளிப் பதக்கம் (Congressional Space Medal of Honor) வழங்கப்பட்டது.
🕵 நாசாவின் விண்ணோட்ரப் பதக்கம் (NASA Space Flight Medal) வழங்கப்பட்டது.
🕵 நாசாவின் சிறப்புமிகு சேவைக்கான பதக்கம் (NASA Distinguished Service Medal)வழங்கப்பட்டது.
🕵நியூயார்க்கில் உள்ள ஒரு தெருவிற்கு 'சாவ்லா வே (Chawla Way)' என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
🕵 இளம் பெண் விஞ்ஞானிகளை ஊக்குவிக்க கர்நாடக அரசாங்கம் 'கல்பனா சாவ்லா விருதினை' 2004ஆம் ஆண்டிலிருந்து வழங்கி வருகிறது.
🕵 நாசா ஆய்வகம், கல்பனா சாவ்லாவின் நினைவை பறைசாற்றும் விதமாக ஒரு அதிநவீன கணினியை அர்ப்பணித்துள்ளது.
🕵ஜூலை 19, 2001ல் கண்டுபிடிக்கப்பட்ட 51826 எனும் எண்ணை கொண்ட சிறுகோள் ஒன்றிற்கு கல்பனா சாவ்லாவின் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
🕵 இந்தியாவில் பல கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசாங்கப் பொது நிறுவனங்களுக்கு, கல்பனா சாவ்லாவின் நினைவை பறைசாற்றும் வகையில் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
உதவித்தொகை :
🕵கல்பனா சாவ்லா நினைவு உதவித்தொகை திட்டம், எல் பாசோவின் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் உள்ள இந்திய மாணவர் சங்கத்தால் (ISA) 2005ஆம் ஆண்டு தகுதிவாய்ந்த பட்டதாரி மாணவர்களுக்காக நிறுவப்பட்டது.
🕵 பஞ்சாப் பொறியியல் கல்லூரி, கல்பனா சாவ்லாவின் பெயரில் ஒரு பெண்கள் விடுதியை ஆரம்பித்ததுடன், அவர் படித்த வான ஊர்தி பொறியியல் துறையில் தலைச்சிறந்த மாணவருக்கு இந்திய ரூபாயில் இருபத்தைந்தாயிரமும், ஒரு பதக்கம் மற்றும் ஒரு சான்றிதழையும் வழங்குகிறது.
👩🚀 மேரிலாந்தில் உள்ள Naval Air Station Patuxent River-ல் உள்ள தனது இராணுவ வீட்டு வசதி வாரியத்திற்கு கொலம்பியா காலனி என்று பெயரிட்டுள்ளது. அங்கு சாவ்லா வே (Chawla Way) எனும் தெருவும் உள்ளது.
கோளரங்கம் :
👩🚀 குருச்சேத்திரத்தில் உள்ள ஜ்யோடிசர் (Jyotisar) எனும் இடத்தில் கட்டியுள்ள கோளரங்கத்திற்கு ஹரியானா அரசாங்கம் கல்பனா சாவ்லா கோளரங்கம் என்று பெயரிட்டுள்ளது.
இதழ் மற்றும் புதினத்தில் கல்பனாவின் பெயர் :
👩🚀 சிறுக்கோள் 51826 கல்பனா சாவ்லா - கொலம்பியா விண்வெளிக் குழுவின் பெயரில் அளித்த ஏழு பாராட்டு இதழ்களில் ஒன்று.
👩🚀 நாவலாசிரியர் பீட்டர் டேவிட் அவரது ஸ்டார் டிரெக்: தி நெக்ஸ்ட் ஜெனரேஷன் : பிபோர் டிசோனர் (Star Trek: The Next Generation: Before Dishonor) எனும் புதினத்தில் ஒரு கதாபாத்திரத்திற்கு சாவ்லா என்று பெயரை வைத்ததுடன், அந்த கதாபாத்திரத்தின் பெயரான சாவ்லாவை அந்த புதினத்தில் வரும் விண்கலத்திற்கும் வைத்துள்ளார்.
👩🚀 ஆர்லிங்க்டனில் இருக்கும் டெக்சாஸ் பல்கலைக்கழகம் கல்பனா சாவ்லா ஹால் (Kalpana Chawla Hall) என்ற விடுதியை 2004ஆம் ஆண்டு துவக்கியது. இதே பல்கலைக்கழகத்தில் தான் கல்பனா தனது முதல் முதுகலைப்பட்டத்தை பெற்றார்.
👩🚀 புளோரிடாவில் உள்ள தொழில்நுட்ப நிறுவனம் Columbia Village Suites என்ற அடுக்கு மாடிக்கட்டிடங்களை தனது மாணவர்கள் தங்குவதற்கு கட்டி தந்துள்ளது. அதில் உள்ள கூடங்களுக்கு கொலம்பியா குழுவில் சென்ற வீரர்களின் பெயர்களை சூட்டியுள்ளனர். அதில் சாவ்லா கூடமும் உண்டு.
👩🚀 நாசா மார்ஸ் எக்ச்பிலோரேஷன் ரோவர் மிஷன் (The NASA Mars Exploration Rover mission) தனது கட்டுப்பாட்டில் உள்ள மலைச்சிகரங்களுக்கு கொலம்பியா குன்றுகள் என்று பெயரிட்டதுடன், ஒவ்வொரு சிகரத்திற்கும் மறைந்த விண்வெளி வீரர்களின் பெயரை சூட்டியுள்ளது. கல்பனா பெயரிலும் ஒரு குன்று உள்ளது.
👩🚀 இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி (Indian Institute Of Technology), கரக்பூரில் கல்பனா சாவ்லா ஸ்பேஸ் டெக்னாலஜி செல் (Kalpana Chawla Space Technology Cell) என்று பெயரிட்டுள்ளது.
👩🚀 டீப் பர்பில் என்ற குழுவை சேர்ந்த ஸ்டீவ் மோர்சே, கொலம்பியா விபத்தை பற்றி 'காண்டாக்ட் லோஸ்ட் (Contact Lost)' என்ற பாடலை பாடியுள்ளார்.
கல்பனா சாவ்லா தனது கனவுகளை பற்றி உதிர்த்த வார்த்தைகள் :
👩🚀 'எனக்கு சிறுவயது முதல் விண்வெளி என்றால் அப்படி ஓர் ஆசை. மொட்டை மாடியில் அமர்ந்து வானத்தையே பார்த்து கொண்டிருப்பேன். நட்சத்திரங்களை எண்ணுவேன். என்னை நண்பர்கள் கேலி செய்வார்கள். ஆனால், வானிலிருந்து எனக்கு மட்டும் ஒரு அழைப்பு குரல் கேட்டுக்கொண்டே இருக்கும்...'
👩🚀 'சிறுவயதில் இருந்த அந்த பிரம்மிப்பு நிஜமாகவே.. விண்வெளியில் பறந்தபிறகு அடங்கியதா?' என்றால் இல்லவே இல்லை... விண்வெளியிலிருந்து நட்சத்திரங்களையும், விண்மீன்களையும் பார்க்கும்போது நாம் பூமியை சேர்ந்தவர்கள்தானா? அல்லது வேற்றுக்கிரக மனிதர்களா? என்றே ஒரு மயக்கம் கலந்த சந்தேகம் வரும்' என்றார்.
👩🚀 '1986ஆம் ஆண்டு டெக்சாஸ் மாநிலத்திலுள்ள ஆர்லிங்டன் பல்கலைக்கழகத்தில் விண்வெளி பற்றிய மேற்பட்டப்படிப்பு படிக்க அட்மிஷன் கிடைத்தது... அதுதான் என் வாழ்க்கையின் பொன்னான நேரம். ஒரு குழந்தையை போல் குதூகலித்தேன். கொலராடோ பல்கலைக்கழகத்தில் டாக்டரேட் படிப்பை வெற்றிகரமாக முடித்தபோது எனது விண்வெளிக் கனவுகள் வசப்படும் என்று முழு நம்பிக்கை வந்தது.
👩🚀 கல்லூரி நாட்களில் லாக்கிட் என்னும் புகழ்பெற்ற நிறுவனத்தின் ஸ்கன்க் வொர்க்ஸ் எனும் விண்வெளி கலங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை பற்றிய புத்தகங்களை படித்தேன். பிறகு நாசாவில் வேலைக்கு சேரும்போது இந்த புத்தக அறிவு பெரிய அளவு கைக்கொடுத்தது.
👩🚀 அதுமட்டுமல்ல, இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்குள் அடியெடுத்து வைத்தபோதே இந்த நாட்டின் விஞ்ஞானத்தை பற்றி முழுதாக உள்வாங்கி கொண்டேன். அதுதான் இங்கிருக்கும் விஞ்ஞானிகளோடு சரிக்கு சமமாக பணிபுரிய எனக்கு கைக்கொடுத்தது' என கூறினார்.
👩🚀 கல்பனா சாவ்லா என்ற என்னுடைய பெயரை சுருக்கமாக 'கேசி' என்றுதான் நாசா விஞ்ஞானிகள் அழைப்பார்கள்.
👩🚀 முதன்முறையாக, நான் 1997ஆம் ஆண்டு விண்வெளியில் பறந்தபோது, எனது மேற்பார்வையில் இருந்த துணை சாட்டிலைட் ஒன்று கழன்று தனியாக பிரிந்து போய்விட்டது. எனது சக விண்வெளி வீரர்கள் விண்வெளியில் ஸ்பேஸ் வாக் செய்து அதை மீட்டனர்.
👩🚀 இதுபற்றி எனக்கு கடைசிவரை மனவருத்தம் இருந்தது. 'இதனால் என் விண்வெளி பயண வாழ்க்கைக்கே ஒரு முடிவு என்று பயந்தேன். நல்ல வேளையாக எனக்கு மேலே பணிபுரிந்த விஞ்ஞானிகள் அதை பெரிதுப்படுத்தவில்லை' என்று பெருமிதத்தோடு கூறினார்.
👩🚀 'நான் தினமும் வீட்டிலும் ரவிசங்கரின் இசையை கேட்டபடிதான் கண் விழிப்பேன். நம் நாட்டின் இசை பாரம்பரியத்திற்கு ஈடு, இணை ஏது?' என்று கூறினார்.
👩🚀 ஒருமுறை அன்றைய பிரதமர் வாஜ்பாய் அமெரிக்கப் பயணம் மேற்கொண்டபோது பிரபலமான இந்தியர்களை சந்திக்க ஏற்பாடு செய்திருந்தனர். அதில் பிரதமரே பார்க்க ஆர்வம் காட்டிய வி.ஐ.பி, கல்பனா சாவ்லாவைதான். பிரதமரிடம் சிறுகுழந்தை போல குதூகலித்து பேசியிருக்கிறார் கல்பனா சாவ்லா.
👩🚀 'இங்கே நான் வந்துவிட்டாலும் என் இதயம் எல்லாம் இந்தியாதான். விண்ணிலிருந்து பார்த்தால் பாரதத்தின் கங்கை நதியும், இமயமலையும் எவ்வளவு மெஜஸ்டிக்காக தெரிந்தன, தெரியுமா? பார்த்து பார்த்து பரவசப்பட்டேன்' என்று அவர் சொன்னபோது பிரதமர் வாஜ்பாய்க்கும் நெகிழ்ச்சி ஏற்பட்டது.
கொலம்பியா விண்வெளி பயணத்திற்கு முன் :
👩🚀 கொலம்பியா விண்வெளி பயணத்தை கல்பனா சாவ்லா மேற்கொள்வதற்கு முன் அவரிடம் நடத்தப்பட்ட பேட்டியில், உங்களை ஊக்கப்படுத்தியவர்கள் அல்லது ஊக்கப்படுத்தி கொண்டிருப்பவர்கள் யார்? என்று கேட்கப்பட்டது.
அதற்கு கல்பனா இவ்வாறு கூறினார் :
👩🚀 முழுமனதோடு ஒரு காரியத்தில் ஈடுபடும் எவரை பார்த்தாலும் எனக்கு ஊக்கம் ஏற்படும். உதாரணத்திற்கு எனது உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் தங்கள் பணியை அவர்கள் முழுமனதோடு செய்த விதம், கற்பிப்பதில் எங்களோடு அதிக நேரத்தை செலவிட்ட விதம் என அவர்களின் பொறுமையை பற்றி இப்போது நினைத்து பார்த்தாலும் வியப்பாக உள்ளது. இதைத்தவிர மேலும் கண்டுபிடிப்பாளர்களின் கதைகளும் எனக்கு ஊக்கம் தரும் என்றார்.
👩🚀 வானத்தை பார்த்து கனவு கண்ட கல்பனா சாவ்லா, அந்த வானத்தையே வசமாக்கி கொண்டதில் ஆச்சரியமில்லை. நம் எல்லோரையும் விட வானத்திற்கு அருகில் சென்றுவிட்டு வந்தவர் கல்பனா சாவ்லா.
👩🚀 கனவோடு கலந்த உழைப்பும், முழுமனதோடு காரியத்தில் ஈடுபடும் பண்பும்தான் கல்பனாவை விண்ணிற்கு கொண்டு சென்றது. அவர் பிறந்த நமது இந்திய மண்ணிற்கும் பெருமை சேர்த்தது.
கல்பனா சாவ்லாவை பற்றி அவரது தந்தை கூறியவை :
👩🚀 விண்வெளி வரை சென்று சாதனை புரிந்த கல்பனா சாவ்லாவின் சிறு வயது நிகழ்வுகளை மகிழ்ச்சியாகவும், உருக்கமாகவும் தெரிவித்திருந்தார் கல்பனா சாவ்லாவின் தந்தை பனாரஸ் லால் சாவ்லா.
👩🚀 அதாவது, 'அவளுடைய 3 வயதில் கர்னல் மாவட்டத்தில் ஃபிளையிங் கிளப்பிற்கு அருகேதான் நாங்கள் குடியிருந்தோம். தலைக்கு மேலே விமானம் பறப்பதை பார்த்து, ரசித்து கொண்டே இருப்பாள். ஒருமுறை, கிளப்பிற்கு அழைத்து செல்லுமாறு தொந்தரவு செய்தாள். அப்போது முதல், அவளோடு சேர்த்து அவளின் சகோதரனையும் ஃபிளையிங் கிளப்பிற்கு அழைத்து செல்வேன். விமானத்தை பார்த்து வியப்பாள்.
👩🚀 எப்படி பறக்கிறது? தரையில் எப்படி ஓடுகிறது? எனக் கேள்விகளாக கேட்டு கொண்டே இருப்பாள். பின்பு அங்கே ஒருமுறை விமானத்தில் பயணித்தோம். அதற்கு பிறகு விமானத்தின் மீதான காதல் அவளிடம் இன்னும் அதிகரித்தது.
👩🚀 காகித விமானங்கள் செய்து பறக்க வைக்க முயன்றுகொண்டிருப்பாள். பள்ளியிலும் விமானத்தின் மீதான காதல் கல்பனாவை விடவில்லை. அந்த காதல்தான் அவளை விண்வெளி வீராங்கனை ஆக்கியது' என்றார்.
👩🚀 கல்பனாவின் பண்பை பற்றி கூறும்போது, 'என் மகள் எதையும் விட்டுக்கொடுக்காதவள். பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் ஏரோஸ்பேஸ் என்ஜினீயரிங் சேர்வதற்காக விண்ணப்பித்திருந்தாள். ஆனால், அவளின் பேராசிரியர் ஒருவர் தொடர்ந்து அவளுக்கு அவநம்பிக்கையையே விதைத்துக்கொண்டு இருந்தார். அதையெல்லாம் மீறி அவள் படித்து முடித்தாள், பின்பு அமெரிக்க பல்கலைக்கழகத்திலும் மேற்படிப்பை தொடர்ந்தாள்' என்று பெருமிதம் கொண்டார் கல்பனாவின் தந்தை.
👩🚀 மேலும், 'மேற்படிப்பிற்கு விண்ணப்பிக்கும் நடைமுறையின்போது நான் சில நாட்கள் பிஸியாக இருந்தேன். அதனால் என் மகள் எனக்காக காத்துக்கொண்டே இருந்தாள். அவளை காக்க வைத்த குற்ற உணர்ச்சி இன்னும் என் மனதில் இருக்கிறது' என்று உணர்ச்சிவசப்பட்டார்.
👩🚀 'மகள்கள் எதையுமே பெற்றோரின் ஆலோசனையோடும், அவர்களின் கவனத்தோடும் நடத்தி கொள்ள விரும்புவார்கள். எனவே, மகள்களுக்கு பக்கபலமாய் பெற்றோர்கள் இருக்க வேண்டும். அவர்களின் கனவுகள் நனவாவதற்கு துணை நின்றால், அவர்களுக்கு அதைவிட பெரிய மகிழ்ச்சி வேறு எதுவும் இருக்கப்போவதில்லை. பெற்றோர்கள் வேலைகளோடு சமரசம் செய்துகொண்டு குழந்தைகளோடு நேரம் செலவழிக்க வேண்டும்' என்றார் கல்பனாவின் தந்தை.
கல்பனா சாவ்லாவை பற்றி அவரது சகோதரர் கூறியவை :
👩🚀 'கல்பனாவிற்கு விண்ணில் பறக்கும் ஆர்வம் வர காரணம், எங்களுடைய அப்பாதான். கர்னாலிஸ் ஃபிளையிங் கிளப் ஒன்றில் எங்களுடைய அப்பாவும் ஓர் உறுப்பினர். அடிக்கடி ரைடு செல்வார். இதை பார்த்து கல்பனாவிற்கும் விண்ணில் பறக்கும் ஆசை வந்தது. இந்த கிளப்பில் சேர்ந்து ஃபிளையிங் கற்றுக்கொண்டாள். இருந்தாலும், அவளை ஒரு டாக்டராகவோ, என்ஜினீயராகவோ ஆக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய விருப்பமாக இருந்தது. அதையும் மீறி அவளது விண்வெளி ஆசையே ஜெயித்தது.
👩🚀 அப்பாவோடு ஸ்பெஷல் தொழில்நுட்பத்தின் உதவியோடு விண்வெளியில் இருந்தபடியே பேசினாள் கல்பனா. அங்கிருந்து பூமியைப் பார்க்கும்போது மிகவும் அழகாக இருக்கிறது என்றெல்லாம் ரசித்து சொல்லியிருக்கிறார்.
👩🚀 கொலம்பியா விண்வெளி பயணம் முடிந்து வெற்றிகரமாக தரையிறங்கியதும் இந்தியாவிற்கு வர வேண்டும். அங்கே நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டு தாய் நாட்டிற்கு உதவ வேண்டும் என்றெல்லாம் சொல்லியிருக்கிறார். இதன்மூலம் எங்களுக்கும் பெருமை தேடித் தரப்போகிறாள் என்று நாங்கள் ஆவலோடு காத்திருந்தோம். ஆனால், எங்கள் ஆசையில் மண் விழுந்துவிட்டது' என்று தன்னுடைய உணர்வுகளை பகிர்ந்து கொண்டார் கல்பனா சாவ்லாவின் சகோதரர் சஞ்சய்.
கல்பனா சாவ்லாவின் திருமணம் :
👩🚀 அமெரிக்காவிற்கு சென்ற போது, 1982ஆம் ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதி விமானப் பயிற்சி ஆசிரியரான ஜீன் பியர் ஹாரிசனும், கல்பனாவும் சந்தித்து கொண்டனர். பிறகு இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்தது. பிறகு, 1983ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் தே
Myilsami Annathurai was born on Monday, July 2, 1958, in the village of Kothavadi, Pollachi taluka, Coimbatore district, to Mr. Myilsami, a teacher and Mrs. Balasaraswathi.
Name: Myilsami Annathurai Born: 02-07-1958 Parents: Myilsami, mother of Balasaraswati Location: Pollachi, Coimbatore, Tamil Nadu ...
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjduBgAE3aOWbCxroKh_4l1qKR2XAdrSaIuBLnJ4VlifnvTBZw1ZKltmUyfZWF0evUTq2RYC3oTvqg3vNyHK8ypP9zhTH-HsJ-z-jmJ3oiy2qEIfcCfqgF1pessTGNvouvDUb2h89zVNdE/s1600/1613363715188705-0.png)
-
Name: Marconi Natural name: Guillermo Marconi Born: 25-04-1874 Death: 20/07/1937 Parents: Kaisab Marconi, Anne Jameson Location...
-
Cake is a favorite pastime of children and adults in today's modern age. It is widely used primarily for celebrations such as ...